பவானி நகராட்சி பகுதியில் கரைபுரண்டு ஓடும் காவிரி வெள்ளம்
2021-11-17@ 14:37:57

பவானி: மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டதால் பவானி நகராட்சி பகுதியில் கரையோரத்தில் உள்ள வீடுகளை அருகாமையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது பவானி நகரில் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள காவேரி நகர், கந்தன் நகர், தினசரி மார்க்கெட், மீனவர் தெரு, பாலக்கரை வீதி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து பாதிப்பு ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. காவிரிக் கரைக்கு மிக அருகாமையில் உள்ள இப்பகுதி மக்கள் வெள்ளம் வரும்போது வீட்டைவிட்டு வெளியேறுவதும் வெள்ளம் வடிந்த பின்னர் குடியேறுவதுமாக உள்ளனர்.
பவானி ஆற்றில் வெள்ளம் வரும்போது சோமசுந்தரம், பழனிபுரம், சீனிவாசபுரம் எக்ஸ்டென்ஷன், பழைய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் கரையோரப் பகுதி மக்கள் பாதிக்கப்படுவர். தற்போது மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், பவானி நகராட்சிப் பகுதியில் கரையோரத்தில் உள்ள படித்துறைகளை மூழ்கியபடி தண்ணீர் செல்கிறது.
தற்போது கரைகளைத் தொட்டபடி தண்ணீர் பெருக்கெடுத்து செல்லும் நிலையில், உபரிநீர் வினாடிக்கு 70 ஆயிரம் கன அடிக்கு மேல் செல்லும்போது கரையோர வீடுகளை தண்ணீர் சூழும் நிலை ஏற்படும். மேட்டூர் அணைக்கு வரும் உபரி நீர் முழுமையாக திறக்கப்படுவதால் ஈரோடு மாவட்ட நிர்வாகம் காவிரி கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. காவிரியில் பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தை பலர் வேடிக்கை பார்ப்பதோடு செல்பி எடுத்தும் செல்கின்றனர்.
Tags:
பவானி நகராட்சிமேலும் செய்திகள்
12 ஆண்டுகளுக்கு பின் மதுரை-தேனி ரயில் சேவை நாளை மறுநாள் தொடக்கம்: பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கி வைக்கிறார்
குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கல்லூரி மாணவி கொலை: 2 இடங்களில் சாலை மறியல்
தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் பாலியஸ்டர் நூல் உற்பத்திக்கு மாற கழிவு பஞ்சு நூல் உற்பத்தியாளர் முடிவு
விருதுநகர் இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கு 7 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
கலால் வரியை குறைத்து பித்தலாட்டத்தை ஒன்றிய அரசு செய்திருக்கிறது: டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி குற்றச்சாட்டு
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் துவக்க விழா ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வளித்தவர் கலைஞர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை