20 மாதங்களுக்கு பிறகு கர்தார்பூர் சிறப்பு பாதை திறக்கப்பட்டது...பஞ்சாப் முதல்வர் குரு நானக் தேவின் நினைவிடத்தில் வழிபாடு நடத்த உள்ளதாக தகவல்!!
2021-11-17@ 09:27:54

புதுடெல்லி: சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக், பாகிஸ்தானின் கர்தார்பூரில் தனது கடைசி நாட்களை கழித்தாக கூறப்படுகின்றது. அவரது நினைவாக அங்கு தர்பார் சாஹிப் என்ற பெயரில் குருத்வாரா அமைக்கப்பட்டுள்ளது. இந்த குருத்வாராவிற்கு சென்று பிரார்த்திப்பது சீக்கியர்களின் புனித கடமைகளுள் ஒன்றாக கருதப்படுகின்றது. பஞ்சாப்பின் குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து கர்தார்பூர் குருத்வாராவிற்கு செல்லும் வழித்தடமானது கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக கடந்த ஓராண்டாக மூடப்பட்டு இருந்தது.
இந்நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது டிவிட்டரில், ‘பிரதமர் மோடி அரசு 17ம் தேதி (இன்று) முதல் கர்தார்பூர் வழித்தடத்தை மீண்டும் திறக்கிறது’ என குறிப்பிட்டு இருந்தார்.இதனைத் தொடர்ந்து குருதாஸ்பூரில் உள்ள தேரா பாபா நானக் நகரில் இருந்து சர்வதேச எல்லை திறக்கப்பட்டு சீக்கியர்கள் புனித பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா காரணமாக 20 மாதங்களாக குருதாஸ்பூரில் மூடப்பட்டு இருந்த சர்வதேச எல்லை தற்போது திறக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் முதல்வர் சரன்ஜித் சிங் சன்னி உள்ளிட்ட அமைச்சர்கள் குரு நானக் தேவின் நினைவிடத்தில் நாளை வழிபாடு நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Tags:
சீக்கியமேலும் செய்திகள்
லடாக்கில் நிகழ்ந்த வாகன விபத்தில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை தீவிரம்..!
கொரோனா பேரிடர் காலத்திற்கு பிறகு தமிழக பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் வீழ்ச்சி!: ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!
பிரதமர் மோடிக்கு 17 கேள்விகளுடன் ஐதராபாத் முழுவதும் பதாகைகள்: தெலுங்கானா மாநிலத்துக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்ன?.. என கேள்வி..!
கொல்கத்தாவில் மற்றொரு சம்பவம் மாடல் அழகி தற்கொலை
8 ஆண்டு பாஜக ஆட்சியின் தோல்வி ஓராண்டில் ரு.30 லட்சம் கோடி சம்பாதித்த 142 பணக்காரர்கள்: காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு
மோடி பேசுவதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை: தேவகவுடாவை சந்தித்த பின் சந்திரசேகர ராவ் புகார்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!