சோதனை என்ற பெயரில் பெண்களிடம் அத்துமீறும் வீரர்கள்: எல்லை பாதுகாப்பு படை குறித்து திரிணாமுல் எம்எல்ஏ சர்ச்சை கருத்து
2021-11-17@ 00:07:40

கொல்கத்தா: சர்வதேச எல்லைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் எல்லை பாதுகாப்பு படையின் அதிகார வரம்பு 15 கி.மீ. தூரத்தில் இருந்து 50 கி.மீ. ஆக அதிகரிக்கப்படுவதாக கடந்த மாதம் ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்தது. இதற்கு எல்லையோர மாநிலங்களான பஞ்சாப், மேற்கு வங்க அரசுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பஞ்சாபில் ஒன்றிய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் நேற்று தீர்மானம் நிறைவேறியது.
இந்நிலையில், சட்டப்பேரவையில் நேற்று நடந்த பிஎஸ்எப். அதிகார வரம்பு பற்றிய விவாதத்தின் போது, ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ உதயன் குகா, `எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்களின் மீது பிஎஸ்எப் வீரர்களின் அட்டூழியங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. சோதனை நடவடிக்கைகள் என்ற பெயரில் பெண்களிடம் அவர்கள் அத்துமீறுகின்றனர். வேலைக்கு சென்று திரும்பிய சிறுமி ஒருவள் இது குறித்து தனது தாயிடம் கூறியுள்ளார். எனவே, இவர்கள் தேசப்பற்றுள்ளவர்களாக இருக்க முடியாது,’ என்று கூறினார். எம்எல்ஏ குகாவின் இந்த கருத்து தற்போது அம்மாநிலத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்த பாஜ எம்எல்ஏ ஸ்ரீரூபா மித்ரா சவுத்ரி, `இந்த கருத்து திரிணாமுல் காங்கிரசின் மனநிலையை எடுத்து காட்டுகிறது,’ என தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
இந்தியாவில் உள்ள ரயில்வே தண்டவாளங்களை தகர்க்க பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு திட்டம்? அதிர்ச்சி தகவல்
பிறரின் மத உணர்வை காயப்படுத்தும் துணைவேந்தரின் இந்த உத்தரவை வாபஸ் பெறுக: மீரட் பல்கலை. சுற்றறிக்கைக்கு இந்திய தேசிய மாணவர்கள் சங்கம் கண்டனம்
நாட்டையே உலுக்கிய விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர் குற்றவாளி என தீர்ப்பு: கொல்லம் கூடுதல் நீதிமன்றம் அதிரடி..!!
ஆந்திராவில் கோடை மழையால் விவசாய நிலங்களில் மக்கள் வைர வேட்டை-பல ஆண்டுகால விநோத நம்பிக்கை
சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து ₹4 லட்சம் பீர் பாட்டில்களை அள்ளிச்சென்ற குடிமகன்கள்-ஆந்திராவில் பரபரப்பு
பாஜகவை சேர்ந்த நடிகையான ஹேமமாலினி கன்னம் போல் இருக்கு சாலை : சட்டீஸ்கர் காங். அமைச்சர் பேச்சால் சலசலப்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்