ஆந்திராவில் நிலநடுக்கம் மக்கள் பீதி
2021-11-15@ 00:36:37

திருமலை: ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நேற்று காலை 7.13 மணியளவில் பயங்கர சத்தத்துடன் நிலநடுக்கம் உணரப்பட்டது. சுமார் 5 முதல் 8 வினாடிகள் வரை நீடித்த நிலநடுக்கம், பாலய்யா சாஸ்திரி லே அவுட், சீதம்மாதாரா, அல்லிபுரம் பங்காரம்மா மெட்டா, வேப்பகுண்டா, சிம்மாசலம், அரிலோவா பகுதி வரை நீடித்தது. நிலநடுக்கத்தின்போது வீட்டில் இருந்த பொருட்கள் உருண்டன. இதனால், மக்கள் அலறியடித்தபடி வீட்டில் இருந்து வெளியேறினர். காலை 10 மணி வரை அச்சத்தில் இருந்த அவர்கள், பின்னர் வீடுகளுக்கு திரும்பினர்.
இந்நிலையில், அல்லிபுரம் பகுதியில் சில நாட்களாக பெய்து வரும் மழையால் பழைய வீட்டின் சில பகுதி இடிந்து விழுந்த நிலையில், நேற்று நிலநடுக்கத்தால் மேலும் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. விசாகப்பட்டினத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் வங்க கடலில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த ந நிலநடுக்கத்தின் மையம் இருந்தது.
மேலும் செய்திகள்
டெல்லி துணை நிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனாவை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு
டெல்லி துணைநிலை ஆளுநராக வினய்குமார் சக்சேனாவை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு
வாடிக்கையாளராக நடித்த போலீஸ்காரரிடம் கேள்வி 11 பெண்களில் யார் உங்களுக்கு வேணும்?: மசாஜ் சென்டர் நிர்வாகி உட்பட 12 பேர் கைது
பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உதவியுடன் ரயில் தண்டவாளங்களை தகர்க்க சதி திட்டம்: மாநிலங்களுக்கு உளவுத்துறை எச்சரிக்கை
விபத்தில் சிக்கிய லாரியில் இருந்த மதுவை போட்டிபோட்டு அள்ளிச்சென்ற குடிமகன்கள்: உறவினர்கள், நண்பர்களையும் வரவழைத்து உற்சாகம்
சட்டவிரோத கைது, சிறையில் கொடுமை புகார்; சிறப்பு உரிமை குழு முன் பெண் எம்பி ஆஜர்.! சபாநாயகரின் அனுமதியை தொடர்ந்து நடவடிக்கை
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை