முதியோர் சலுகை உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் மீண்டும் வழங்கப்படும் என அறிவித்த ரயில்வே அமைச்சருக்கு நன்றி :மதுரை எம்.பி. சு. வெங்கடேசன்
2021-11-13@ 12:26:55

சென்னை : முதியோர் சலுகை உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் மீண்டும் வழங்கப்படும் எனவும் , சிறப்பு வண்டிகள் அனைத்தும் ரெகுலர் வண்டிகளாக இயக்கப்படும் என்றும் ரயில்வே வாரியம் அறிவித்துள்ளதற்கு மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , 'ரயில்வே வாரியத்தின் நவம்பர் 12ஆம் தேதி கடிதத்தில் அனைத்து சிறப்பு ரயில்களையும் கால அட்டவணைப்படி அதிலுள்ள வண்டி எண்களுடன் ரெகுலர் வண்டிகள் ஆக இயக்கிட ஆணையிட்டுள்ளது. அதனடிப்படையில் தெற்கு ரயில்வே 295 சிறப்பு ரயில்களின் வண்டி எண்களை கால அட்டவணை படியான எண்களுடன் மாற்றி அமைக்க உத்தரவிட்டுள்ளது .இந்த வண்டிகளில் பறிக்கப்பட்ட முதியோர் சலுகை உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் மீண்டும் வழங்கப்படும். வழக்கமான கட்டணங்கள் வசூலிக்கப்படும். இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள் முன்பதிவுடன் இயங்கும். எந்த வண்டிகளில் பொதுப் பெட்டிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனவோ அந்த வண்டிகளில் பொதுப் பெட்டிகள் உடன் வண்டிகள் இயங்கும் . புதிய எண்களுடன் இயங்கும் வண்டிகளில் முன்பே முன்பதிவு செய்தவர்களுக்கு கூடுதல் கட்டணமும் அதிக கட்டணத்துக்கு மீதி திருப்பி தருவதோ கிடையாது .எந்த தேதியில் இருந்து இந்த வண்டிகள் ரெகுலர் வண்டிகள் ஆக இயக்கப்படும் என்பது விரைவில் அறிவிக்கப்படும். சர்வரில் உரிய மாற்றங்கள் செய்தபின் அமுலுக்கு வரும். அமுலுக்கு வரும் தேதியிலிருந்து சலுகைகளும் திரும்ப கிடைக்கும்.
அக்டோபர் 22 ஆம் தேதி நான் ரயில்வே அமைச்சரை சந்தித்து முதியோர் சலுகை உட்பட ஐம்பத்தி மூன்று வகை சலுகைகளையும் மீண்டும் வழங்கிட வலியுறுத்தினேன் .அவர் ரயில் வண்டிகளை சிறப்பு வண்டி களாக இயக்குவதை மாற்றி ரெகுலர் வண்டிகள் ஆக இயக்கப்படும்போது சலுகைகள் மீண்டும் வழங்கப்பட நடவடிக்கை எடுப்பேன் என்று வாக்குறுதி அளித்தார்.சிறப்பு வண்டியிலேயே சலுகைகள் வழங்க நான் வலியுறுத்தினேன். அல்லது ரெகுலர் வண்டிகள் ஆக சிறப்பு வண்டிகளை இயக்க விரைந்து முடிவெடுக்க நான் வலியுறுத்தினேன். அந்த அடிப்படையில் இப்போது அனைத்து சிறப்பு வண்டிகளையும் ரெகுலர் வண்டிகள் ஆக கால அட்டவணையில் உள்ள எண்களுடன் இயக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. வழக்கமான கட்டணங்களுடன் சலுகைகளுடன் இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ரயில்வே அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் .இதனை விரைந்து நடைமுறைக்கு கொண்டுவர கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
சிவசங்கர் பாபாவால் பாதிக்கப்பட்ட மேலும் 4 முன்னாள் பள்ளி மாணவிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை: 7 பக்க குற்றப்பத்திரிகை தயார்
தமிழகத்தில் 16 நகராட்சி ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது
தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 42 பேர் பாதிப்பு; புதிய உயிரிழப்பு இல்லை; 41 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்
மருத்துவ பயன்பாட்டுக்கு மாநகராட்சி நிலம் : சென்னை மேயர் பிரியா தகவல்
480 பேருக்கு மாற்று வீடுகள் ஒதுக்கப்படும்: அமைச்சர் அன்பரசன் தகவல்
பாலியல் வழக்கு: குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை; பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!