முழு கொள்ளளவை எட்டி கடல் போல் காட்சி அளிக்கும் கடைமடை காவிரிப்பாசன ஏரிகள்-24 மணி நேரமும் கரைகளை கண்காணிக்கும் பொதுப்பணித்துறை அதிகாரிகள்
2021-11-12@ 12:11:09

அறந்தாங்கி : பல ஆண்டுகளுக்கு பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தின் காவிரி கடைமடைப்பகுதி ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் கறம்பக்குடி, ஆலங்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி வட்டங்களில் ஒரு சில பகுதி கல்லணைக் கால்வாய் மூலம் காவிரி நீர்ப்பாசனம் நடைபெற்று வருகிறது. இதில் கடைமடைப்பகுதியான நாகுடி பகுதியில் 110 ஏரிகள் மூலம் காவிரிப்பாசனம் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் காவிரி நீர் இப்பகுதிக்கு வந்தாலும், பெரும்பாலும் அனைத்து ஏரிகளும் நவம்பர் மாதத்தில் முழு கொள்ளளவு இருப்பதில்லை.
மழை பொழிவு, காவிரி நீர் வரத்து இருந்தாலும், பாசனத்திற்கு ஏரிகளில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் அதிகபட்சமாக ஏரிகளில் 80 சதவீதத்திற்கு மேல் தண்ணீர் இருப்பு இருப்பதில்லை.
ஆனால் இந்த ஆண்டு நாகுடி கடைமடை பகுதிக்கு தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை உத்தரவின்பேரில், நீர்வளத்துறை, கல்லணைக் கால்வாய் கோட்ட அதிகாரிகள் நடவடிக்கையின்பேரில், போதுமான தண்ணீர் வரத்து இருந்ததாலும், வந்த தண்ணீரை அதிகாரிகள் முறையாக அனைத்து ஏரிகளுக்கும் பகிர்ந்து வழங்கியதாலும், பெரும்பாலான ஏரிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக தண்ணீர் இருப்பு இருந்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக இப்பகுதியில் உள்ள ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மேலும் அந்த ஏரிகளில் இருந்து உபரி நீர் உபரி நீர் போக்கி வழியாக தடையின்றி வெளியேறி வருகிறது.
நீர்வளத்துறை, கல்லணைக் கால்வாய் கோட்ட நாகுடி பிரிவு அலுவலக பராமரிப்பில் உள்ள 110 ஏரிகளின் கரைகள் தொடர்மழையின் காரணமாகவும், கால்நடைகள் மற்றும் மனிதர்கள் நடந்து சென்றதாலும் சேதமடைந்து விடாமல் இருக்க நாகுடி உதவிப் பொறியாளர் செந்தில்குமார் தலைமையில், பாசன உதவியாளர்கள் 24 மணிநேரமும், ஏரிகளின் கரைகள், ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள், ஏரிகளின் உபரி நீர் போக்கிகள் உள்ளிட்டவற்றை கண்காணித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சிசு உயிரிழப்பை பூஜ்யநிலைக்கு கொண்டுவர வலியுறுத்தல்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
விழுப்புரம் அருகே அங்கன்வாடி மையத்தில் சத்துமாவு கஞ்சி சாப்பிட 29 பேர் மயக்கம்: திண்டிவனம் ஆட்சியர் நேரில் ஆய்வு
உஸ்ஸ்ஸ்... அப்பாடா.... அக்னி நட்சத்திரம் நாளையுடன் நிறைவு
கோவையில் கார் மீது வேன் மோதிய கோர விபத்தில் 4 வயது சிறுவன் பரிதாப பலி!: பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியீடு..!!
நாகை அருகே கழிவுநீர் கலந்த நீரை குடித்ததால் 10-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலக்குறைவு: அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
விருத்தாச்சலம் அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து ஆற்றில் வீசிய நபர்: கைது செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!