மயிலாப்பூரில் பரிதாபம் பஸ்சுக்கு காத்திருந்தவர் மயங்கி விழுந்து பலி
2021-11-12@ 00:08:58

சென்னை: திருவொற்றியூரை சேர்ந்த மாதவன் (60), மயிலாப்பூரில் உள்ள டீக்கடை ஒன்றில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர், நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல மயிலாப்பூர் திருவள்ளுவர் சிலை அருகே உள்ள நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது திடீரென அவர் சாலையிலேயே மயங்கி விழுந்தார். இதை பார்த்த பொதுமக்கள் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், அங்கு வந்த மயிலாப்பூர் போலீசார், மாதவனை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, மின்சாரம் பாய்ந்து அவர் இறந்தாரா அல்லது வேறு காரணமாக என விசாரித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள்
சிறப்பு மின்சார ரயில்கள் ரத்து
படத்தில் அரசியல் வசனங்கள் இயக்குனரிடம் அஜித் மறுப்பு
டிமாண்டி காலனி 2ம் பாகத்தில் அருள்நிதி
தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் ரூ.53 கோடியில் பணிகள் மேற்கொள்ள தீர்மானம்: துணை மேயர் தகவல்
திருமணமான ஒன்றரை ஆண்டில் புதுப்பெண் தற்கொலை: போலீசில் தந்தை புகார்
கர்நாடகத்தில் இருந்து ஒரத்தநாடு திருமண விழாவிற்கு வந்த 3.6 டன் அழுகிய இறைச்சி பறிமுதல்: உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை