6 விமானங்கள் பெங்களூரு, ஐதராபாத் திரும்பின: 8 சர்வதேச விமானங்கள் ரத்து
2021-11-12@ 00:08:40

சென்னை: சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கொச்சியிலிருந்து காலை 10.50 மணிக்கு சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ், காலை 10.55 மணிக்கு மும்பையிலிருந்து வந்த ஏர் இண்டியா, மதுரையிலிருந்து காலை 11.05 மணிக்கு வந்த ஸ்பைஸ் ஜெட் ஆகிய 3 விமானங்கள் பெங்களூருக்கும், டெல்லியிலிருந்து காலை 11.30 மணிக்கு வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஐதராபாத்திற்கும் திருப்பி அனுப்பப்பட்டன. ஏற்கனவே காலையில் டெல்லி, மும்பையிலிருந்து வந்த இரண்டு தனியார் விமானங்கள் திருப்பி ஐதராபாத், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டன. மொத்தம் 6 விமானங்கள் நேற்று சென்னையில் தரையிறங்க முடியாமல் திரும்பின. இதுபோல துபாய், சார்ஜாவிலிருந்து சென்னை வரும் 4 விமானங்கள், சென்னையிலிருந்து துபாய், சார்ஜா செல்லும் 4 விமானங்கள் என மொத்தம் 8 சர்வதேச விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. இதற்கிடையே, சென்னையிலிருந்து புறப்படும் விமானங்கள் மட்டும் இயக்கப்படும் என்று சென்னை விமான நிலைய இயக்குநர் தெரிவித்திருந்தார்.
Tags:
6 flights Bangalore Hyderabad return 8 international flights canceled 6 விமானங்கள் பெங்களூரு ஐதராபாத் திரும்பின 8 சர்வதேச விமானங்கள் ரத்துமேலும் செய்திகள்
இது கல்விக்கு முக்கியத்துவம் தரும் அரசு: புதிய பள்ளி திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
மார்ச் 22, நவ.1ம் தேதி கூடுதல் கிராம சபை கூட்டங்கள்: அரசாணை வெளியீடு
சென்னை விமான நிலையத்தில் சுமார் 8 நிமிடங்கள் சந்திப்பு பிரதமரிடம் ஓபிஎஸ், இபிஎஸ் பேசியது என்ன?: பரபரப்பு தகவல்கள்
இதுவரை 2,600 கோடி மதிப்பு கோயில் சொத்துகள் மீட்பு: அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி
குட்கா, பான்மசாலாவுக்கு மேலும் ஓராண்டு தடை
டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அனைத்து போட்டி தேர்வுகளிலும் தமிழ்த்தாள் தகுதி தேர்வை எழுதுவதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு: தமிழக அரசு உத்தரவு
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!