தொடர்ந்து நீடிக்கும் புகை, பனிமூட்டம்!: டெல்லியில் மீண்டும் மோசமான நிலையில் காற்றின் தரம்...மக்கள் பரிதவிப்பு..!!
2021-11-10@ 12:44:45

டெல்லி: தலைநகர் டெல்லியில் கடுமையான பனிமூட்டம் காரணமாக இன்று காற்றின் தரம் மோசமான நிலையில் காணப்பட்டது. டெல்லியில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு காற்று மாசுபாடு அபாய அளவை எட்டியுள்ளது. தலைநகர் டெல்லியில் தீபாவளி பண்டிகையின் போது அதிகமாக பட்டாசு வெடித்ததால் தொடர்ந்து புகைமூட்டம் நீடித்து வருகிறது. பட்டாசு வெடித்ததன் காரணமாக காற்று மாசு அடைந்துள்ளதக கூறப்படுகிறது. இன்று அதிகாலையிலும் வானம் புகைமூட்டமாக காட்சியளித்தது. பனிமூட்டம் மற்றும் புகை இரண்டும் கலந்து கண்களை மறைக்கும் வகையில் பனிமூட்டம் நீடித்து வருகிறது.
காற்றின் தரத்தை கணக்கிடப் பயன்படும் எ.கியூ.ஐ. முறையில் 100க்கும் அதிகமான புள்ளிகள் இருந்தால் காற்றின் தரம் மோசம் என்று கருதப்படும் நிலையில், டெல்லியில்எ.கியூ.ஐ. ஆனது 382 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. வரும் 15ம் தேதிக்குள் குறைந்தபட்ச வெப்பநிலை 10 டிகிரிக்கு குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தினர் தெரிவித்தனர். டெல்லியில் இந்த ஆண்டு பருவமழை அதிகமாக பெய்த நிலையிலும் வயல் எரிப்பு உள்ளிட்ட காரணங்களால் காற்று மாசு அதிகரித்ததாக கூறப்படுகிறது. டெல்லியை சுற்றி அமைந்துள்ள தொழிற்சாலைகள், வாகனப் பெருக்கம் ஆகியவை காரணமாக காற்று தர குறியீடு தொடர்ந்து மிக மோசமடைந்த பிரிவில் நீடிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
லடாக்கில் நிகழ்ந்த வாகன விபத்தில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை தீவிரம்..!
கொரோனா பேரிடர் காலத்திற்கு பிறகு தமிழக பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் வீழ்ச்சி!: ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!
பிரதமர் மோடிக்கு 17 கேள்விகளுடன் ஐதராபாத் முழுவதும் பதாகைகள்: தெலுங்கானா மாநிலத்துக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்ன?.. என கேள்வி..!
கொல்கத்தாவில் மற்றொரு சம்பவம் மாடல் அழகி தற்கொலை
8 ஆண்டு பாஜக ஆட்சியின் தோல்வி ஓராண்டில் ரு.30 லட்சம் கோடி சம்பாதித்த 142 பணக்காரர்கள்: காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு
மோடி பேசுவதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை: தேவகவுடாவை சந்தித்த பின் சந்திரசேகர ராவ் புகார்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!