தமிழ்நாட்டில் பரவலாக பெய்யும் தொடர் மழை!: பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 3,954 பாசன ஏரிகள் நிரம்பின..!!
2021-11-10@ 12:18:05

சென்னை: தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் தொடர் மழையால் பொதுப்பணித்துறை பராமரிப்பில் உள்ள 3,954 பாசன ஏரிகள் நிரம்பின. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அணைகள், நீர்த்தேக்கங்கள், பாசன ஏரிகள், குளங்கள் நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
* தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 14,138 பாசன ஏரிகளில் இன்று காலை 10 மணி நிலவரப்படி 3,954 ஏரிகள் 100 சதவீதம் கொள்ளளவை எட்டின.
* தமிழ்நாட்டில் 2,874 பாசன ஏரிகள் 76 சதவீதம் முதல் 99 சதவீதம் வரை கொள்ளளவை எட்டி வேகமாக நிரம்பி வருகின்றன.
* 2,433 பாசன ஏரிகள் முழு கொள்ளளவில் 51 முதல் 75 சதவீதம் வரை எட்டி, நிரம்பி வருகின்றன.
* மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,340 பாசன ஏரிகளில் இதுவரை 444 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ளன.
* தென்காசி மாவட்டத்தில் 338 பாசன ஏரிகளும், தஞ்சை மாவட்டத்திலும் 345 ஏரிகளும் 100 சதவீதம் நிரம்பி மறுகால் பாய்கின்றன.
* விழுப்புரம் 221, திருவண்ணாமலை 297, புதுக்கோட்டை 204, திருவள்ளூர் 200, நெல்லை 192, சேலம் 173, தூத்துக்குடி 85 பாசன ஏரிகளும் நிரம்பி வருகின்றன.
* தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கூடுதலாக 263 பாசன ஏரிகள் முழுமையாக நிரம்பி மறுகால் பாய்கின்றன.
மேலும் செய்திகள்
திண்டிவனம் நோக்கி செல்லும் பஸ்கள் மாமண்டூர் மோட்டலில் நிற்க வேண்டும்: போக்குவரத்துத்துறை உத்தரவு
வங்கக்கடலில் காற்று சுழற்சி எதிரொலி தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
இலங்கை சிறையில் இருந்து 4 மீனவர் விடுதலை
மழை காரணமாக காய்கறிகள் வரத்து குறைவு தக்காளி, பீன்ஸ், அவரைக்காய் விலை இரு மடங்கு அதிகரிப்பு
மாநில அரசின் தீர்மானத்தை தாமதப்படுத்த யாருக்கும் அதிகாரமில்லை சட்ட விதிகளை மீறிய ஆளுநர் உச்ச நீதிமன்றம் கண்டனம்
பேரறிவாளனை விடுவித்தது உச்சநீதிமன்றம் இந்திய வரலாற்றில் மீண்டும் மீண்டும் நினைவுகூரத்தக்க தீர்ப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!