புதுச்சேரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.5,000 நிவாரணம் வழங்க முன்னாள் முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தல்..!!
2021-11-09@ 11:10:23

புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5,000 நிவாரணமாக வழங்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார். புதுவையில் ஞாயிறுக்கிழமை தொடங்கி கனமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியும், ஆறுகளில் வெள்ளப்பெருக்கால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் ஆயிரம் ஏக்கர் அளவில் பயிர்கள் நீரில் மூழ்கின. இந்நிலையில், இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள நாராயணசாமி, புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஏழை தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் அனைவரும் எவ்வித வருமானமுமின்றி பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் வியாபாரமும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே மக்களுக்கு நிவாரணமாக புதுச்சேரி மாநில அரசு ஒவ்வொரு குடும்பங்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் அளிக்கும் உத்தரவை உடனடியாக பிறப்பிக்க வேண்டும். மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள தண்ணீரை வெளியேற்ற வேண்டும். தொடர்ந்து, பாதுகாக்கப்பட்ட குடிதண்ணீரை மக்களுக்கு கொடுக்கவும், மின்சாரம் தடையில்லாமல் மக்களுக்கு கிடைப்பதற்கு ஆவணம் செய்ய வேண்டும் என நாராயணசாமி வலியுறுத்தினார். கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள பேரிடர் மீட்புத்துறை இருக்கிறதா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் செய்திகள்
கனமழையால் மோசமான வானிலை!: சென்னை - டெல்லி இடையே 4 விமானங்கள் இன்று ரத்து..பயணிகள் தவிப்பு..!!
கர்நாடகாவில் அணையின் சுவற்றில் ஏற முயன்று 30 அடி உயரத்தில் இருந்து விழுந்த இளைஞர்
இந்தியாவில் உள்ள ரயில்வே தண்டவாளங்களை தகர்க்க பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு திட்டம்? அதிர்ச்சி தகவல்
பிறரின் மத உணர்வை காயப்படுத்தும் துணைவேந்தரின் இந்த உத்தரவை வாபஸ் பெறுக: மீரட் பல்கலை. சுற்றறிக்கைக்கு இந்திய தேசிய மாணவர்கள் சங்கம் கண்டனம்
நாட்டையே உலுக்கிய விஸ்மயா தற்கொலை வழக்கில் கணவர் குற்றவாளி என தீர்ப்பு: கொல்லம் கூடுதல் நீதிமன்றம் அதிரடி..!!
ஆந்திராவில் கோடை மழையால் விவசாய நிலங்களில் மக்கள் வைர வேட்டை-பல ஆண்டுகால விநோத நம்பிக்கை
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!