ஆளும் கட்சி எம்எல்ஏ மிரட்டல் பேச்சால் ஆந்திராவில் பரபரப்பு சந்திரபாபு கழுத்தை அறுத்து நாக்கை வெட்டி விடுவேன்...
2021-11-07@ 01:09:35

சித்தூர்: ‘ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் கழுத்தை அறுத்து விடுவேன், நாக்கை வெட்டி விடுவேன்,’ என்று ஆளும் கட்சி எம்எல்ஏ. பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூரில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் எஸ்சி பிரிவு மாவட்ட தலைவர் சப்தகிரி பிரசாத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபுவை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூதலப்பட்டு எம்எல்ஏ பாபு நேற்று (நேற்று முன்தினம்) தரைக்குறைவாக தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்துள்ளார். சந்திரபாபு 14 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்தவர். 7 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்று 35 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்தவர். அவருடைய கழுத்தை அறுத்து விடுவேன், நாக்கை வெட்டி விடுவேன் என பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது.
பாபு எம்எல்ஏ.வாக வெற்றி பெறுவதற்கு முன்பு ஜில்லா பரிஷத் தேர்தலில் மாபெரும் தோல்வி அடைந்தவர். அவரிடம் பணம் பெற்று தற்போதைய ஆளும் கட்சியான, ஒய்எஸ்ஆர் காங்கிரசார் அவருக்கு எம்எல்ஏவாக போட்டியிட வாய்ப்பு வழங்கினர். இரண்டரை ஆண்டுகள் அவர் எம்எல்ஏவாக பதவி வகித்து வருகிறார். ஊழல் செய்து பல நூறு கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார். தனது பேச்சுக்காக இவர், சந்திரபாபுவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார். சந்திரபாபுவுக்கு ஆளும் கட்சி எம்எல்ஏ. விடுத்துள்ள மிரட்டல், ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இவ்வாறு அவர் மிரட்டியதற்கான ஆதாரம் வெளியிடப்படவில்லை.
Tags:
Ruling Party MLA Intimidation Andhra Chandrababu ஆளும் கட்சி எம்எல்ஏ மிரட்டல் ஆந்திரா சந்திரபாபுமேலும் செய்திகள்
தனிப்பட்டவர்களின் சுயநலத்தால் இரட்டை இலை சின்னம் முடங்கி உள்ளது: வி.கே.சசிகலா பேச்சு
பாஜக தலைமையகத்தை முற்றுகையிடுவோம்: சிவசேனா எச்சரிக்கை
வருகிற 11-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவில் பொதுச் செயலாளரை தொண்டர்கள் மூலம் தேர்வு செய்ய தீர்மானம்; எடப்பாடி முயற்சியை, சட்டப்பூர்வமாக முறியடிக்க பன்னீர்செல்வம் திட்டம்
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரி ஓ பன்னீர் செல்வம் மனு... நேற்று மாலை தான் தனக்கு அழைப்பிதழ் வந்ததாக சாடல்!!
அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராகிறார் எடப்பாடி பழனிசாமி : ஜெயலலிதாவுக்கு நிகராக பழனிசாமிக்கு அதிகாரம் வழங்க திட்டம்!!
பெரியார், அண்ணா, கலைஞர் போட்ட விதைதான் தமிழகம் முன்னணி மாநிலமாக இருக்க காரணம்: உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பேச்சு
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!