தொடர் மழையால் போடிமெட்டு புலியூத்து அருவியில் கொட்டும் தண்ணீர்
2021-11-06@ 10:20:37

போடி : தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும், கடந்த ஒரு மாதமாக தமிழக-கேரள எல்லைப்பகுதியான இடுக்கி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால், ஆங்காங்கே மலைப்பகுதிகளில் சிறு, சிறு அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இந்நிலையில், போடி மலையடிவாரமான முந்தலிலிருந்து 17 கொண்டை ஊசி வளைவுகளோடு 1,600 அடி உயரத்தில் போடிமெட்டுக்கு சாலை செல்கிறது. இதில், 8வது கொண்டை ஊசி வளைவு சாலையை கடந்து புலிகள் நடமாடும் பகுதியான புலியூத்தில் நீண்ட உயரமான மலை அருவியில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது.
இச்சாலையை கடக்கும் சுற்றுலாப் பயணிகள் அருவியை ரசித்து செல்பி எடுக்கின்றனர். மேலும், இந்த அருவிநீர் மலை வழியாக கடந்து கொட்டகுடி ஆற்றில் கலந்து வருகிறது. மேலும், கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், விவசாயத்துக்கு பயன்படும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
சின்னசேலம் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும்; பயணிகள் கோரிக்கை
முண்டியம்பாக்கம் மருத்துவமனை அருகே குண்டும் குழியுமான தார் சாலை நோயாளிகள் அவதி
காஸ் விலை அதிரடி உயர்வு இனி விறகு அடுப்பு தான்; புலம்பும் இல்லத்தரசிகள்...
சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் பாலம் தடுப்பு சுவர் உயர்த்தப்படுமா? சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
தொடர் மழையால்; ஊட்டி பூங்கா புல் மைதானத்திற்குள் நுழைய தடை
குன்னூர் டால்பின் நோஸ் பகுதியில் கடும் பனிமூட்டம்: செல்பி எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!