குளித்தலை அடுத்த ஆதி நத்தம் சாலையில் சாய்ந்து நிற்கும் தென்னை மரங்களால் விபத்து அபாயம்
2021-11-03@ 14:33:26

குளித்தலை : கரூர் மாவட்டம் மருதூர் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட ஆதி நத்தம் கிராமம் பகுதி உள்ளது. இப்பகுதி சாலை பெட்டவாய்த்தலையில் இருந்து கணேசபுரம் செல்லும் வழியில் உள்ளது. இவ்வழியாக தினந்தோறும் விவசாய தொழிலாளர்கள், இயந்திர வாகனங்கள், மாட்டு வண்டிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் அதிகமாக சென்று வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், வெளியூர்களுக்கு வேலைக்கு செல்வோரும் இவ்வழியாக இருசக்கர வாகனத்தில், சைக்கிளிலோ சென்று வருவது வழக்கம்.
இந்நிலையில் ஆதி நத்தம் அரசு பள்ளி அருகே சாலையோரம் மூன்று தென்னை மரங்கள் விபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலையின் குறுக்கே சாய்ந்து நிற்கின்றன. தற்போது மழைக்காலம் என்பதால் மரத்தின் அடிப்பகுதி மழையினால் ஊறி எந்நேரமும் சாய்ந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை இருந்து வருகிறது. அதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து தனி கவனம் செலுத்தி ஏதாவது விபத்துகள் ஏற்படும் முன் மூன்று தென்னை மரங்களையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
சேலம்-விருத்தாசலம் பயணிகள் ரயில் இன்று முதல் தினமும் இருமுறை இயக்கம்
கொடைக்கானலில் மலர் கண்காட்சி நாளை துவக்கம்
விழுப்புரத்தில் பரபரப்பு கழுத்தை அறுத்து முன்னாள் கவுன்சிலரை கொல்ல முயற்சி: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
ஓஎன்ஜிசி குழாய் உடைந்து கச்சா எண்ணெய் பரவியதால் 2 ஏக்கர் விவசாய நிலம் சேதம்
அழகர்கோவில் பகுதியில் மண்பானை தயாரிக்கும் பணி தீவிரம்
பஸ் கண்ணாடியை உடைத்து டிரைவர் கண்டக்டர் மீது தாக்குதல் : தொழிலாளிக்கு வலை
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை