ராமநாதபுரத்தில் கனமழை வீடு இடிந்து மூதாட்டி பலி
2021-11-03@ 13:53:31

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பெய்த கனமழைக்கு வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்தார்.ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக லேசாகவும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரவு 7 மணிக்கு மேல் சுமார் 3 மணிநேரம் ராமநாதபுரம் நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்ய துவங்கியது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் மக்கள் அவதியடைந்தனர்.
கனமழைக்கு, ராமநாதபுரம் தெற்கு முனியசாமி கோயில் தெருவை சேர்ந்த அங்குசாமி ஓட்டு வீட்டின் ஒரு பக்க சுவர் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் சிக்கி அங்குசாமியின் மனைவி ரெத்தினம்மாள் (75) பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மழைக்கு சுவர் இடிந்து மூதாட்டி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
12 ஆண்டுகளுக்கு பின் மதுரை-தேனி ரயில் சேவை நாளை மறுநாள் தொடக்கம்: பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கி வைக்கிறார்
குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கல்லூரி மாணவி கொலை: 2 இடங்களில் சாலை மறியல்
தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் பாலியஸ்டர் நூல் உற்பத்திக்கு மாற கழிவு பஞ்சு நூல் உற்பத்தியாளர் முடிவு
விருதுநகர் இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கு 7 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
கலால் வரியை குறைத்து பித்தலாட்டத்தை ஒன்றிய அரசு செய்திருக்கிறது: டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி குற்றச்சாட்டு
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் துவக்க விழா ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வளித்தவர் கலைஞர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை