திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் பிரபுதேவா சுவாமி தரிசனம்
2021-11-03@ 12:49:48

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் பிரபுதேவா சுவாமி தரிசனம் செய்தார்.திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நடிகை, நடிகர்களும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்களால் முடிந்த பணம் மற்றும் நகைகளை கோயிலில் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீவாரி உண்டியலில் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை ஏழுமலையான் கோயிலில் நடிகர் பிரபுதேவா சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்தனர்.
பின்னர், வேத பண்டிதர்கள் மூலம் ஆசிர்வாதம் செய்து, லட்டு உள்ளிட்ட தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். மேலும், நினைவு பரிசாக சுவாமி புகைப்படம் வழங்கினர்.
முன்னதாக, கோயில் நுழைவுவாயிலில் உள்ள தங்க கொடி மரத்தை பிரபுதேவா தொட்டு வணங்கினர். அதேபோல், தெலுங்கு திரைப்பட நடிகர் கோபி சந்த் நேற்று ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கும் வேத பண்டிதர்கள் மூலம் ஆசிர்வாதம் செய்து, தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது. தொடர்ந்து, ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் நடிகர் கோபிசந்த் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்து, தீர்த்த பிரசாதங்கள் வழங்கி
னர்.
மேலும் செய்திகள்
லடாக்கில் நிகழ்ந்த வாகன விபத்தில் 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் இந்திய விமானப்படை தீவிரம்..!
கொரோனா பேரிடர் காலத்திற்கு பிறகு தமிழக பள்ளி மாணவர்களின் கற்றல் திறன் வீழ்ச்சி!: ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!
பிரதமர் மோடிக்கு 17 கேள்விகளுடன் ஐதராபாத் முழுவதும் பதாகைகள்: தெலுங்கானா மாநிலத்துக்கு அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை என்ன?.. என கேள்வி..!
கொல்கத்தாவில் மற்றொரு சம்பவம் மாடல் அழகி தற்கொலை
8 ஆண்டு பாஜக ஆட்சியின் தோல்வி ஓராண்டில் ரு.30 லட்சம் கோடி சம்பாதித்த 142 பணக்காரர்கள்: காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு
மோடி பேசுவதை தவிர வேறு எதுவும் செய்யவில்லை: தேவகவுடாவை சந்தித்த பின் சந்திரசேகர ராவ் புகார்
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!