அமெரிக்கா செல்ல விசா கிடைப்பது தாமதமாகும்: தூதரகம் அறிவிப்பு
2021-11-01@ 01:16:06

புதுடெல்லி: கொரோனா பரவல் குறைந்திருப்பதைத் தொடர்ந்து, உலகின் பல நாடுகளும் பயண கட்டுப்பாடுகளை நீக்கி உள்ளன. 2 டோஸ் தடுப்பூசி போட்ட வெளிநாட்டவர்கள் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என சமீபத்தில் அனுமதி வழங்கப்பட்டது. இந்த நடைமுறை வரும் 8ம் தேதி அமலுக்கு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வரும் 8ம் தேதி நடைமுறைக்கு வரும் புதிய பயண கட்டுப்பாடு கொள்கையின்படி, விசா வைத்திருக்கும் 30 லட்சம் இந்தியர்கள், 2 டோஸ் தடுப்பூசி ஆவணத்துடன் அமெரிக்கா வர தகுதியானவர்கள் ஆவர்.
கொரோனா தொடர்பான குறுக்கீடுகளில் இருந்து மீண்டு வரும் நிலையில், எங்கள் தூதரகங்களில் விசா பெறுவதற்கான காத்திருப்பு காலம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. விண்ணப்பதாரர்களுக்கும், எங்கள் ஊழியர்களுக்கும் போதுமான பாதுகாப்பு அம்சங்களுடன் எங்கள் திறனை மேம்படுத்தும் வரையில் மக்கள் பொறுமையுடன் காத்திருப்பதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டாக சிறையில் வாடிய பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு; ஆளுநரின் செயலுக்கு கடும் கண்டனம்
லாரி மீது மோதிய கார் தீப்பிடித்தது: 3 பேர் உடல் கருகி பரிதாப சாவு: திருப்பதி அருகே சோகம்
பேரறிவாளன் வழக்கு தொடர்பான 29 பக்க தீர்ப்பு நகலை இணையதளத்தில் வெளியிடப்பட்டது உச்சநீதிமன்றம்
லாரி மீது மோதிய கார் தீப்பிடித்தது 3 பேர் உடல் கருகி பரிதாப சாவு: திருப்பதி அருகே சோகம்
பழைய பேருந்துகளை பள்ளி வகுப்பறையாக மாற்ற திட்டம்: கேரளாவில் புதிய முயற்சி
கொச்சி அடுக்குமாடி குடியிருப்பில் நடிகை தூக்கு போட்டு தற்கொலை: காதலன் தலைமறைவு
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!