செந்துறை பகுதியில் தொடர் மழையால் பூசணிக்காய் சாகுபடி பாதிப்பு: விவசாயிகள் வேதனை
2021-10-31@ 17:47:34

செந்துறை: செந்துறை அருகே பயிரிடப்பட்ட பூசணிக்காய், பரங்கிக்காய் தொடர் மழை காரணமாக அழுகி வருகிறது. ஏற்கனவே விலை குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மேலும் அதிக இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள இராயம்புரம், பொட்டவெளி, அகரம், வெள்ளூர், சென்னிவனம், காவேரிப்பாளையம், மேட்டுப்பாளையம், பொய்யாதநல்லூர் பகுதிகளில் அதிகளவில் பூசணிக்காய் மற்றும் பரங்கிக்காய் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு ஏர் உழுவது, உரம், விதை, மருந்து என ஏக்கருக்கு ரூ.20 ஆயிரத்திற்கு மேல் செலவாகிறது. இந்நிலையில் பருவமழை காரணமாக பூசணிக்காய் பிஞ்சுகள் அழுகி வருகின்றது. ஏற்கனவே ஆயுத பூஜைக்கு அறுவடை செய்த பூசணிக்காய் கிலோ ரூ.1.50 முதல் ரூ.2 வரையிலும், பரங்கிக்காய் 75 பைசா முதல் ரூ.1.25 வரை கொள்முதல் செய்யப்பட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ 14 வரை விற்பனை செய்யப்பட்டது.
சென்ற ஆண்டு 6 ரூபாய் விற்ற பூசணிக்காய் இந்தாண்டு 2 ரூபாய்க்கு விற்பனை செய்ததில் விவசாயிகளுக்கு அதிக இழப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் மீதமுள்ள பிஞ்சுகள் அழுகி வருவது மேலும் இழப்பை ஏற்படுத்தும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும், மக்காச்சோளம், நெல் மற்றும் பருத்திக்கு இழப்பீடு வழங்குவது போல் பரங்கி, பூசணிக்காய் பயிர் செய்பவர்களுக்கும் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
சூறைக்காற்றுடன் கனமழை கடலூரில் 2 லட்சம் வாழை மரங்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
மதுரையில் ஆவணம் இன்றி யானை வளர்த்த நபர்... போராடி மீட்ட வனத்துறை: திருச்சி யானைகள் மறுவாழ்வு மையத்தில் சேர்ப்பு
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா ெதாடங்கியது: திரளான பக்தர்கள் பங்கேற்பு
குன்னூரில் நாளை பழக்கண்காட்சி: அரங்குகள் அமைக்கும் பணி தீவிரம்
தேவதானப்பட்டி பகுதியில் கனமழை; சூறைக்காற்றுக்கு வாழை, வெற்றிலை கொடிக்கால் சேதம்: இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்: விவசாயிகள் வேதனை: கிடங்கு அமைத்து தர கோரிக்கை
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!