அமெரிக்க கோர்ட் உத்தரவு பாங்காக் நிறுவன ஹெலிகாப்டர் பறிமுதல்
2021-10-31@ 00:56:14

சென்னை: அமெரிக்க நீதிமன்றத்தின் கோரிக்கையைடுத்து, பாங்காக் நிறுவனத்தின் ஹெலிகாப்டரை அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.ஹமீத் இப்ராஹிம் அன்ட் அப்துல்லா மெரிலாக் ஏவியன் சர்வீஸ் என்ற நிறுவனம், பெல் 214 என்ற ஹெலிகாப்டரை மாத வாடகை அடிப்படையில் அமெரிக்காவை சேர்ந்த ஏஏஆர் கார்ப்பரேசன் நிறுவனத்திடம் இருந்து, 2019ல் இந்தியாவிற்கு கொண்டு வந்தது. இந்நிலையில், பண மோசடி விவகாரத்தில் சிக்கியுள்ள இந்த ஹெலிகாப்டரை இயக்க தடை விதித்து கொலம்பியா மாவட்ட நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தது. இந்த உத்தரவை அமல்படுத்துமாறு இந்திய அமலாக்கத் துறைக்கு அமெரிக்காவை சேர்ந்த ஹோம்லேண்ட் செக்யூரிட்டி துறை வேண்டுகோள் விடுத்தது.இதையடுத்து, இந்த ஹெலிகாப்டரை அமலாக்கத் துறை அதிகாரிகள் தேடி வந்தனர்.
மெரிலாக் ஏவியன் சர்வீஸ் இயக்குநர்களின் வீடுகள் மற்றும் ஹெலிகாப்டர்களை நிறுத்தும் இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சோதனையில் பெல் 214 ஹெலிகாப்டர் சென்னையில் உள்ள ஜெ மாதாதீ இலவச வணிக கிடங்கு மண்டலத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஹெலிகாப்டரின் பல்வேறு பாகங்கள் பழுதடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து, பெல் 214 ஹெலிகாப்டரை அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக அமலாக்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் அறிவிப்பு பொறியியல் படிப்புக்கான கட்டணம் அதிகரிப்பு: பிஇ, பிடெக், பிஆர்க் படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600, அதிகபட்ச கட்டணம் ரூ.1,89,800 ஆக நிர்ணயம்
ஆண்டுக்கு 4 டன் ஆக்சிஜன் கிடைப்பதால் மியாவாக்கி காடுகளை அதிகரிக்க திட்டம்: மாநகராட்சி முடிவு
75வது பிறந்த நாள் ஜூன் 4ம் தேதி எஸ்.பி.பிக்கு இசை அஞ்சலி
ஆண்டுக்கு 4 டன் ஆக்சிஜன் கிடைப்பதால் மியாவாக்கி காடுகளை அதிகரிக்க திட்டம்: மாநகராட்சி முடிவு
எனது கருத்தையே பிரதமர் வெளிப்படுத்தினார்: கிச்சா சுதீப்
கும்பமேளாவில் தமிழ் சினிமா படப்பிடிப்பு: இயக்குனர் பேட்டி
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்