பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை: முன்னாள் சிறப்பு டி.ஜி.பி.யின் கோரிக்கை நிராகரிப்பு
2021-10-27@ 15:41:05

சென்னை: ராஜேஷ் தாஸ் மீதான வழக்கு விசாரணையை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து மாற்ற முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ராஜேஷ் தாஸ் மீதான வழக்கு விசாரணை தற்பொழுது விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமென்று ராஜேஷ் தாஸ் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை தற்பொழுது சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மற்றும் செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டது இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது அப்பொழுது ராஜேஷ் தாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இந்த வழக்கை விசாரிக்க விழுப்புரம் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை எனவும் பயணத்தின்போது நடைபெற்ற சம்பவம் என்பதால் கள்ளக்குறிச்சி மாவட்டம் அல்லது செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் தான் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மேலும் வழக்கை கள்ளக்குறிச்சி அல்லது செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் உரிய சட்ட விதிகளுக்குட்பட்டதால் விழுப்புரம் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே வழக்கு விசாரணைக்கு எந்த தடையும் விதிக்க கூடாது எனவும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி ராஜேஷ் தாசின் கோரிக்கையை நிராகரித்து மற்றும் அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த வழக்கு விசாரணையை மூன்று மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டுமென்ற காலக்கெடுவையும் உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் விதித்துள்ளார்.
மேலும் செய்திகள்
சென்னை 2.0 திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.500 கோடியில் மழைநீர் வடிகால் சாலை, பூங்கா பணிகள் தீவிரம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
கொள்ளை சம்பவங்களில் மீட்கப்பட்ட ரூ.1 கோடி நகை, பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு: தாம்பரம் கமிஷனர் ரவி நடவடிக்கை
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற யாதவர்களுக்கு பாராட்டு விழா
ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்தவர் பலி
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் ஜூன் 12ம் தேதிக்கு முன்னதாக நாளை மறுதினம் தண்ணீர் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
நெடுஞ்சாலை, ரயில்வே திட்டத்தை தொடங்கி வைக்க வரும் 26ம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகாரிகள் ஆய்வு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்