வன்னியர் இடஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கையில் காலி இடங்களை ஓபிசி பிரிவிலிருந்து நிரப்ப வேண்டும்: அரசு உத்தரவு
2021-10-27@ 00:04:43

சென்னை: உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசிதழில் கூறியிருப்பதாவது: உயர் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகங்கள், அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள வன்னியர், சீர்மரபினர், இதர பிரிவினர்களில் ஏதேனும் ஒன்றில் தகுதியான நபர் இல்லாத நிலையில் ஏற்படும் காலியிடங்களை இதர பிரிவில் இருந்து சுழற்சி முறையில் நிரப்புவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (வன்னியர்) பிரிவில் 10.5% இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை காலியிடங்கள் ஏற்பட்டால், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (சீர்மரபினர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (இதர பிரிவு) ஆகிய பிரிவுகளில் காத்திருப்பு பட்டியலில் இருப்பவர்களை இன சுழற்சி பட்டியலின்படி நிரப்பப்பட வேண்டும்.
அதேபோல், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்- சீர் மரபினருக்கான 7% இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை இடங்களில் காலியிடங்கள் ஏற்பட்டால், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (வன்னியர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (இதர பிரிவு) ஆகியோருக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்- இதர பிரிவினருக்கான 2.5 % இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை காலியிடங்கள் இருந்தால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (வன்னியர்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (சீர்மரபினர்) ஆகியோருக்கும் இனசுழற்சி பட்டியல் அடிப்படையில் இடங்கள் வழங்கி காலியிடங்களை நிரப்பலாம்.
மேலும் செய்திகள்
போரூர் மின்சார மயான பூமியில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணி: பிருந்தாவன் நகர் மயான பூமியை பயன்படுத்திக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு
ஹெல்மெட் அபராதம் என்பது மக்களை பாதுகாக்க எடுக்கப்படும் முடிவு; ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை: கபில் குமார் சரட்கர் பேட்டி
மதிமுக நிர்வாகிகள் 3 பேர் அதிரடி நீக்கம்: வைகோ அறிவிப்பு
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரியை ஏற்றியது ரூ.26.77 குறைத்தது ரூ.14.50 மட்டுமே: ஒன்றிய பாஜ அரசு மீது கே.எஸ்.அழகிரி தாக்கு
ஒரு ஆதரவாளர் கூட கிடைக்காமல் ஓபிஎஸ் திண்டாட்டம்; ராஜ்யசபா அதிமுக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் தொடர் இழுபறி: எடப்பாடி பழனிச்சாமி திடீர் கெடு
டூ வீலர்கள் திருட்டு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை