வியன்னா ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் பெரட்டினி, முர்ரே வெற்றி
2021-10-26@ 17:21:30

வியன்னா: ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவில் தற்போது முன்னணி டென்னிஸ் நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ள வியன்னா ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்திய நேரப்படி இன்று அதிகாலை நடந்த முதல் சுற்றுப் போட்டி ஒன்றில் இத்தாலியின் மேட்டியோ பெரட்டினியும், ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாப்யிரினும் மோதினர். ஏடிபி தரவரிசையில் பெரட்டினி தற்போது 7ம் இடத்திலும், பாப்யிரின் 71ம் இடத்திலும் உள்ளனர். இப்போட்டியில் முதல் செட்டில் சற்றுப் போராடிய பாப்யிரின், அந்த செட்டை டைபிரேக்கரில் பறி கொடுத்
தார். இரண்டாம் செட்டை எளிதாக கைப்பற்றிய பெரட்டினி, இப்போட்டியில் 7-6, 6-3 என்ற கணக்கில் எளிதாக வென்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு முதல் சுற்றுப் போட்டியில் போலந்தின் முன்னணி டென்னிஸ் நட்சத்திரம் ஹியூபர்ட் ஹர்காசுடன், இங்கிலாந்தின் அனுபவம் மிக்க வீரர் ஆண்டி முர்ரே மோதினார். ஏடிபி தரவரிசையில் ஹர்காஸ் தற்போது 10ம் இடத்தில் உள்ளார். தரவரிசையில் முன்னாள் நம்பர் 1 வீரர் என்ற போதிலும், 2 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் சர்வதேச டென்னிஸ் போட்டிகளுக்கு திரும்பியுள்ள ஆண்டி முர்ரே தற்போது 156ம் இடத்தில் உள்ளார். இதே வியன்னா ஓபன் டென்னிசில் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை ஆண்டி முர்ரே, இரண்டு முறை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் எதிர்பாராத வகையில் ஆண்டி முர்ரே 6-4, 6-7, 6-3 என 3 செட்களில் ஹர்காசை வீழ்த்தினார். போட்டி முடிந்த பின்னர் அவர் அளித்த பேட்டியில், ‘மீண்டும் சர்வதேச போட்டிகளுக்கு திரும்பிய பின்னர், சில போட்டிகளில் நான் சரியாக ஆடவில்லை. ஆனால் இந்தப் போட்டியில் எனது ஆட்டம் எனக்கு திருப்தியளித்துள்ளது என்றே கூற வேண்டும். ஹர்காசும் சிறப்பாக ஆடினார். அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது’’ என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 150 ரன்கள் குவிப்பு: மொயீன் அலி அதிரடி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் விளையாடுவேன்: சிஎஸ்கே கேப்டன் தோனி
குஜராத்தை வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்பை தக்கவைத்தது பெங்களூரு கோஹ்லி உணர்வுப்பூர்வமாக எழுச்சியுடன் ஆடினார்: கேப்டன் டூபிளெசிஸ் பாராட்டு
ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தானுடன் இன்று மோதல் ஆறுதல் வெற்றிபெறுமா சென்னை?
ஆர்சிபி அணிக்கு எதிராக ஹர்திக் அரை சதம் விளாசல்
ஆர்ச்சர் மீண்டும் காயம்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்