SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாலாஜா ரயில் நிலையத்தில் சோதனை ரயிலில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

2021-10-26@ 11:47:28

வாலாஜா :  வாலாஜா ரயில் நிலையத்தில் நடந்த சோதனையில் ரயிலில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.வாலாஜா வழியாக செல்லும் ரயிலில் வெளிமாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக ராணிப்பேட்டை பறக்கும் படை தாசில்தாருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. தாசில்தார் இளஞ்செழியன் மற்றும் போலீசார் வாலாஜா ரயில் நிலையத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

இரவு 11 மணியளவில் சென்னையில் இருந்து ைமசூர் நோக்கிச்சென்ற காவிரி எக்ஸ்பிரஸில் சோதனையிட்டனர். அப்போது இருக்கையின் அடியில் பதுக்கி கடத்திய 1 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை தமிழ்நாடு உணவுப்பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைத்தனர். அரிசியை கடத்திய நபர்கள் யார்? என்பது குறித்து ராணிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • eartheyaa

    ஈக்வடார் நாட்டில் பயங்கர நிலச்சரிவு : 16 பேர் பலி

  • kerala-fest-beauty-28

    அடடா.. என்ன ஒரு அழகு!: ஆண்களெல்லாம் அழகு தேவதையாக மாறும் கேரள திருவிழா..!!

  • isreal-22

    இஸ்ரேலில் நீதித்துறையின் அதிகாரத்தை குறைக்க புதிய சட்டம்: பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்..!!

  • ADMK-edappadi-palanisamy

    அதிமுக பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிசாமி: இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து தொண்டர்கள் கொண்டாட்டம்!!

  • germanysstt1

    ஜெர்மனியில் போக்குவரத்து ஊழியர்கள் மிகப்பெரிய வேலை நிறுத்தப் போராட்டம் : வெறிச்சோடிய நகரங்கள்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்