4.96 கோடியில் மாவட்ட கருவூல கட்டிடம்: கான்பரன்ஸ் மூலம் முதல்வர் திறந்து வைத்தார்
2021-10-26@ 00:10:11

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், 4.96 கோடியில் மாவட்ட கருவூல கட்டிடத்தை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலிக்காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட கருவூல அலுவலகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலிக்காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார்.
கலெக்டர் ஆர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்ட கருவூல அலுவலர் முத்து வரவேற்றார். 4.96 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கட்டிடத் திறப்பு விழாவில் காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, எம்பி சிறுவேடல் செல்வம், எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், திட்ட இயக்குநர் தேவி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் படப்பை மனோகரன், திமுக மாவட்ட அவைத்தலைவர் சேகரன், ஒன்றிய செயலாளர்கள் பி.எம்.குமார். சாலவாக்கம் குமார், சேகர், பூபாலன், நிர்வாகிகள் எம்.எஸ்.சுகுமார், தசரதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகள்
தமிழ்நாடு நாள் விழா; பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை போட்டிகள்
15வது அமைப்பு தேர்தலுக்காக திமுக சார்பில் தேர்தல் நிர்வாகிகள் வேட்பு மனு
ஆவடி தொகுதியில் ரூ.24.5 லட்சத்தில் 13 புதிய மின்மாற்றிகள்; அமைச்சர் சா.மு.நாசர் துவக்கினார்
திருவள்ளூர் மருத்துவ கல்லூரியில் யாருக்கும் கொரோனா இல்லை; கல்லூரி முதல்வர் தகவல்
திருத்தணி முருகன் கோயிலில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.2.70 கோடி பணிக்கொடை
அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்கல்வி பெற விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்