பயணிகளுக்கு நற்செய்தி.! நவம்பர் 1ம் தேதி முதல் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளுக்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி
2021-10-25@ 20:45:20

சென்னை: நவம்பர் 1ம் தேதி முதல் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளுக்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. தெற்கு ரயில்வேயில் 23 ரயில்களில் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரெயில்களில் பயணிக்க முன்பதிவு அவசியமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கொரோனாவுக்கு பின்னர் முன்பதிவில்லா 2-ம் வகுப்பு பெட்டிகளில் பயணிக்கவும் முன்பதிவு அவசியமாக்கப்பட்டுள்ளது. இதனால், அவசர வேலையாக ரெயிலில் வெளியூர்களுக்கு செல்லும் பயணிகள் சற்று சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், நவம்பர் 1-ம் தேதி முதல் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகள் மீண்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
23 ரெயில்களில் முன்பதிவில்லா 2-ம் வகுப்பு ரெயில் பெட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. முன்பதிவில்லா ரெயில்பெட்டிகளில் பழைய முறைப்படி முன்பதிவின்றி பயணிக்கலாம். பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகள் மீண்டும் இயக்கப்பட உள்ளது. கோவை - நாகர்கோவில் , திருச்சி - திருவனந்தபுரம் இடையேயான ரெயில்களிலும் முன்பதிவில்லா ரெயில் பெட்டிகள் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. தெற்கு ரெயில்வேயின் இந்த அறிவிப்பால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் செய்திகள்
அதிமுக ஆட்சியில், விருது பெறுவதற்காக 22,000 சாலை விபத்து மரணங்கள் குறைத்து காட்டப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியீடு..!
தமிழ்நாட்டு மக்களுக்கு சீரான மின்விநியோகம் வழங்க வேண்டும்.: அனைத்து அலுவலர்களுக்கும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு
சென்னை பாரிமுனையில் மாநகராட்சிக்கு சொந்தமான 130 கடைகளுக்கு சீல்: 40 லட்சம் வாடகை பாக்கி
கலைஞரின் மனச்சாட்சியாக அறியப்படும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 89வது பிறந்தநாள்: திருவுருவ சிலைக்கு திமுக அமைச்சர்கள் மரியாதை..!!
காஞ்சிபுரம் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு மேசை, விலையில்லா சைக்கிள்கள்; எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் சுதந்திர போராட்ட தியாகி கொடியேற்றினார்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!