ஏவுகணை சோதனைகளை நிறுத்தி விட்டு பேச வாங்க: வடகொரியாவுக்கு அமெரிக்கா அழைப்பு
2021-10-25@ 01:37:10

சியோல்: கடந்த சில மாதங்களாக வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி, அண்டை நாடான தென்கொரியா, ஜப்பான் ஆகியவற்றை அச்சுறுத்தி வருகிறது. சமீபத்தில், நீர்மூழ்கி கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசி சோதித்தது. இந்நிலையில், வடகொரியாவுக்கான அமெரிக்க பிரதிநிதி சுங் கிம் தென்கொரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘வடகொரியா ஏவுகணை சோதனைகளை நிறுத்திவிட்டு, அமெரிக்கா உடனான அணுசக்தி ஒப்பந்தத்தை கடைபிடிக்க வேண்டும். ஆத்திரமூட்டும் செயல்களையும், சீர்குலைக்கும் சீண்டல்களையும் நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும். எந்தவித நிபந்தனையும் இல்லாமல் வடகொரியாவின் பேச்சுவார்த்தையை சந்திக்க நாங்கள் தயார். இதில், அமெரிக்கா எந்தவித உள்நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை,’’ என்றார்.
மேலும் செய்திகள்
இலங்கை நாடாளுமன்றத்தில் ‘கோ ஹோம் கோத்த’ கோஷத்தால் அதிபர் ஓட்டம்: எதிர்கட்சிகளின் அமளியால் பரபரப்பு
2 நாளில் 24 நிலநடுக்கங்கள்: இன்றும் அந்தமானில் உணரப்பட்டது
அமெரிக்காவின் சுதந்திர தின நிகழ்ச்சி; துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி: மர்ம நபரை பிடித்து விசாரணை
“காளி“ கையில் சிகரெட்.. இந்துக் கடவுளை அவமதிக்கும் ஆவணப்படத்தை திரும்பப் பெறுங்கள்... இந்திய தூதரகம் அதிரடி!!
அமெரிக்காவில் சோகத்தில் முடிந்த சுதந்திர தினம்.. மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி; உடலில் தோட்டா பாய்ந்த 24 பேருக்கு சிகிச்சை!!
அந்தமான் தீவுகளில் 7 முறை நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை இல்லை
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!