கூடுதல் விலைக்கு மதுபானம் விற்ற டாஸ்மாக் மேலாளர் ஊழியர் சஸ்பெண்ட்
2021-10-24@ 01:11:58

சென்னை: சின்ன மாத்தூர் ஆம்ஸ்ட்ராங் நகரில் செயல்படும் டாஸ்மாக் கடையில், கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்ததால், குடிமகன்கள் விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து தமிழ்நாடு வாணிப கழக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணை ஆட்சியர் சுமதி, சம்மந்தப்பட்ட கடை ஊழியர்களான லட்சுமணன் மற்றும் மேலாளர் சேகர் ஆகிய இருவரையும் நேரில் அழைத்து விசாரித்தார்.
அதில், மதுபாட்டில்களுக்கு அரசு நிர்ணயித்த விலையை விட ₹10 கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது.
இதையடுத்து டாஸ்மாக் கடை மேலாளர் சேகர் மற்றும் ஊழியர் லட்சுமணன் ஆகிய இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து துணை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக விற்கப்பட்டாலோ அல்லது கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டாஸ்மாக் உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
கட்சிக்கு களங்கம் ஏற்படுத்திய எடப்பாடி பழனிசாமியை எம்.ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது: ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி..!!
மணிவிழா காணும் அன்புச் சகோதரர் எழுச்சித் தமிழர் திருமாவளவனை நெஞ்சார வாழ்த்துகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் வாழ்த்து..!!
அதிமுக ஆட்சியில், விருது பெறுவதற்காக 22,000 சாலை விபத்து மரணங்கள் குறைத்து காட்டப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியீடு..!
தமிழ்நாட்டு மக்களுக்கு சீரான மின்விநியோகம் வழங்க வேண்டும்.: அனைத்து அலுவலர்களுக்கும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு
சென்னை பாரிமுனையில் மாநகராட்சிக்கு சொந்தமான 130 கடைகளுக்கு சீல்: 40 லட்சம் வாடகை பாக்கி
கலைஞரின் மனச்சாட்சியாக அறியப்படும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 89வது பிறந்தநாள்: திருவுருவ சிலைக்கு திமுக அமைச்சர்கள் மரியாதை..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!