காலில் திடீர் தசை பிடிப்பால் தவிப்பு இன்ஸ்பெக்டருக்கு முதலுதவி செய்த எஸ்பி: போலீசார் நெகிழ்ச்சி
2021-10-24@ 01:11:57

சென்னை: ஊராட்சி துணை தலைவர், ஒன்றிய தலைவர், துணை தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, மதுராந்தகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் உள்பட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டம் முழுவதும் ஆய்வு செய்த செங்கல்பட்டு எஸ்பி விஜயகுமார், மதுராந்தகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்வையிட சென்றார்.அப்போது, எஸ்பியை வரவேற்க, இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் வேகமாக ஓடி வந்தார். அந்த நேரத்தில் அவருக்கு திடீரென காலில் தசை பிடிப்பு ஏற்பட்டது.
இதில் வலியால் துடித்த அவர், கால்களை பிடித்துக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டார். இதை கண்டதும், எஸ்பி விஜயகுமார், உடனடியாக அவரது கால்களை பிடித்து,முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர், காவல்துறை வாகனத்தில் அவரை அனுப்பி வைத்தார். இன்ஸ்பெக்டருக்கு காலில் தசை பிடிப்பு ஏற்பட்டவுடன், தானொரு எஸ்பி என்பதையும் மனதில் கொள்ளாமல், பொது இடத்தில் சிகிச்சையளித்த எஸ்பியின் செயல், அனைத்து போலீசாரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
மேலும் செய்திகள்
உயர்த்தியதில் இருந்து 50% குறைத்துவிட்டு மாநிலங்களை குறைக்கச் சொல்வதா?.. ஒன்றிய அரசுக்கு தமிழக நிதியமைச்சர் கேள்வி
சென்னை 2.0 திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.500 கோடியில் மழைநீர் வடிகால் சாலை, பூங்கா பணிகள் தீவிரம்: மாநகராட்சி அதிகாரிகள் தகவல்
கொள்ளை சம்பவங்களில் மீட்கப்பட்ட ரூ.1 கோடி நகை, பொருட்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு: தாம்பரம் கமிஷனர் ரவி நடவடிக்கை
உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற யாதவர்களுக்கு பாராட்டு விழா
ஓடும் பஸ்சில் இருந்து கீழே குதித்தவர் பலி
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் ஜூன் 12ம் தேதிக்கு முன்னதாக நாளை மறுதினம் தண்ணீர் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்