டி.20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்று இன்று தொடக்கம்: ஆஸ்திரேலியா-தென்ஆப்ரிக்கா முதல் போட்டியில் மோதல்
2021-10-23@ 14:16:27

துபாய்: 7வது ஐசிசி டி.20உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் இன்று சூப்பர் 12 சுற்று தொடங்குகிறது. சூப்பர் 12 சுற்றில் குரூப்- 1ல் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்கதேசம், குரூப்-2ல் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். சூப்பர் 12 சுற்றின் முதல் நாளான இன்று மாலை 3.30 மணிக்கு அபுதாபியில் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-தென்ஆப்ரிக்கா மோதுகின்றன.
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் வார்னர், மேக்ஸ்வெல், ஸ்மித், மிட்சல்மார்ஷ், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இதில் வார்னர் பார்ம் இழந்து தவித்து வருகிறார். இதனால் மேக்ஸ்வெல், ஸ்மித், மார்சையே பெரிதும் நம்பி உள்ளது. பந்துவீச்சை பொறுத்தமட்டில் வேகத்தில் ஹேசல்வுட், ஸ்டார்க், சுழலில் ஆஷ்டன் அகர், ஜம்பா ஆகியோர் உள்ளனர். மறுபுறம் தென்ஆப்ரிக்கா அணியும் பார்மில் உள்ளது. கேப்டன் பவுமா, டி காக், மார்க்ராம், துஸ்சென் பேட்டிங்கிலும் வலுசேர்க்கலாம். பந்துவீச்சில் ரபாடா, நோர்டியா, நிகிரி, மகராஜ், ஷம்சி ஆகியோருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கும்.
மேலும் செய்திகள்
கொல்கத்தாவில் நாளை மறுதினம் முதல் குவாலிபயர்; குஜராத்-ராஜஸ்தான் பலப்பரீட்சை
ஐபிஎல் 2022; மும்பை அணி வெற்றி: பெங்களூரு அணி ரசிகர்கள் கொண்டாட்டம்
மும்பை இந்தியன்சிடம் தோற்று வாய்ப்பை வீணடித்தது டெல்லி: பிளே ஆப் சுற்றில் ஆர்சிபி
லீக் சுற்று இன்றுடன் நிறைவு கடைசி ஆட்டத்தில் ஐதராபாத்-பஞ்சாப் மோதல்
மும்பை இந்தியன்சுக்கு எதிராக பாவெல் அதிரடியில் டெல்லி ரன் குவிப்பு
கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் பிரெஞ்ச் ஓபன் இன்று தொடக்கம்
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்