கேரள வனப்பகுதிக்கு துப்பாக்கியுடன் சென்ற தமிழக ஏட்டு சஸ்பெண்ட்
2021-10-22@ 00:05:12

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கேரள மாநிலம் முத்தங்கா வனச்சரகம் தோட்டமூலா வனப்பகுதியில் கடந்த 19ம் தேதி துப்பாக்கியுடன் சிலர் சென்றனர். இது வனப்பகுதியில் வைத்திருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக ரேஞ்சர் சுனில்குமார் ஆய்வு செய்தார். அப்போது பந்தலூர் அருகே எருமாடு காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றும் சிஜீ (42) என்பவர் தனது நண்பர்களுடன் வனப்பகுதிக்கு சென்றது தெரியவந்தது. தமிழக காவல்துறை எதற்காக கேரளா வனப்பகுதிக்குள் துப்பாக்கியுடன் சென்றது?.
வனவிலங்குகளை வேட்டையாடவா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்பது குறித்து கேரளா வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிசிடிவியில் பதிவான காட்சிகள் மற்றும் ஆதாரங்களுடன் நீலகிரி மாவட்ட எஸ்பிக்கு புகார் தெரிவித்தனர். அதன்பேரில், விசாரணை நடத்தி தலைமை காவலர் சிஜீவை சஸ்பெண்ட் செய்து எஸ்பி ஆஷிஸ் ராவத் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
தேயிலை தோட்டங்களை சூழ்ந்த சோலையார் அணை வெள்ளம்
உத்தமபாளையம் வனப்பகுதிகளில் வன உயிரினங்களை காப்பதற்கு மரக்கன்று நடும் திட்டம் தொடங்கப்படுமா?: வன ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
தஞ்சாவூர் மாவட்டம் ராமநாதபுரம் பகுதியில் குறுவை பயிருக்கு ரசாயன உரத்திற்கு மாற்றாக இயற்கை உரம் தெளிப்பு: புதிய முயற்சியில் விவசாயி மும்முரம்
உணவுக்குழாயில் சிக்கிய பீட்ரூட் சிகிச்சையால் உயிர் தப்பிய பசுமாடு
அதிமுக ஆட்சியில் ரூ.49 லட்சம் அம்போ... பங்காருசாமி கண்மாய் சீரமைக்கப்படுமா?: போடி பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பு
காங்கயம் அருகே 24 ஆண்டுக்கு பிறகு கத்தாங்கன்னி குளம் நிரம்பியது: கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுத்த அமைச்சருக்கு பாராட்டு
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!