லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில் மேலும் 4 பேர் கைது.: ஒருவரிடம் இருந்து தோட்டாக்களுடன் கூடிய கைத்துப்பாக்கி பறிமுதல்
2021-10-19@ 11:45:48

லக்கிம்பூர்: லக்கிம்பூரில் வாகனம் ஏற்றி விவசாயிகள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் .உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்கிம்பூரில் நடந்த சில வாரங்களுக்கு முன்னதாக 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
அப்போது போராட்டத்துக்குள் காரை ஏற்றியதால் 4 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதனையடுத்து நடந்த வன்முறை நிகழ்வுகளில் மேலும் 4 பேர் பலியாகினர். இந்த வன்முறை காரணமாக மொத்தம் 9 பேர் உரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டு மக்களை கடும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.
அதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் பல எதிர்ப்புகள், கண்டனங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதனால் ஒன்றிய அமைச்சரின் மகன் உள்பட சிலர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில், தற்போது மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பாஜக-வை சேர்ந்த சுமித் ஜெயிஸ்வால் என்பதும், இவர் விவசாயிகள் மீது மோதிய வாகனத்தில் இருந்தவர் என்றும் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்த விசாரணையில், நபரான சத்ய பிரகாஷ் திரிபாதி என்பவரிடம் இருந்து தோட்டாக்களுடன் கூடிய கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த 4 பேரையும் சேர்த்து இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
இந்தியாவின் 14வது குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் ஜெகதீப் தங்கர்: குடியரசு தலைவர் முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்..!!
இந்தியா போன்றதொரு நாட்டில் இலவசங்கள் கொடுக்காதீர்கள் என்று உத்தரவிட முடியாது: உச்சநீதிமன்றம்
தொடரும் அவலம்!: டெல்லியில் பெண்களுக்கு எதிராக 1,100 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு.. ப.சிதம்பரம் கடும் கண்டனம்..!!
மகாராஷ்டிராவில் 4 தொழிலதிபர்கள் தொடர்புடைய இடங்களில் ஐ.டி. ரெய்டு: கணக்கில் வராத ரூ.390 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல்..!!
2 ஆண்டுகளுக்கு பின் உள்நாட்டு விமான கட்டணங்களுக்கான உச்ச வரம்பை நீக்கிய ஒன்றிய அரசு: ஆக.31 முதல் அமல்..பயணிகள் கவலை..!!
இந்தியாவில் ஒரே நாளில் 16,299 பேருக்கு கொரோனா... 53 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!