உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் வைகோவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்
2021-10-18@ 00:21:11

சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மதிமுக சார்பில் ‘பம்பரம்’ சின்னத்தில் போட்டியிட்டு 2 மாவட்டக் கவுன்சிலர்கள் மற்றும் 16 ஒன்றியக் கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று காலை 8 மணியளவில் மதுரையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அவருடன், துரை வைகோவும் வந்தார். அப்போது வைகோ மற்றும் துரை வைகோவுக்கு மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தலைமையில் மாவட்ட செயலாளர்கள் ஜீவன், கழககுமார் உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கட்சி கொடி ஏந்தியபடி உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் தங்களது சான்றிதழை வைகோவிடம் காட்டி வாழ்த்து பெற்றனர்.
மேலும் செய்திகள்
ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதி குஜராத் பெண்களுக்கு மாதம் ரூ.1000 நிதி உதவி
சொல்லிட்டாங்க...
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் போன்று பாஜக கூட்டணியில் இருந்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியும் பதவி விலக வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் நடித்த பிரபல நடிகை ஜெயசுதா பாஜவில் சேர முடிவு?
பிளவுகளை கடந்து அதிமுக வெற்றி வாகை சூடும்; அம்மாவின் ஆட்சியை உருவாக்குவோம்: சசிகலா பேட்டி
பூனைக்குட்டி வெளியே வந்தது; ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படத்தயார்?: டிடிவி தினகரன் அறிவிப்பு
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!