மெக்சிகோவில் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என தேடுதல் ஆணையம் அறிவிப்பு
2021-10-15@ 14:22:45

மெக்சிகோ நாட்டில் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே மெக்சிகோ நாடு, போதைப்பொருள் பயன்பாடு, போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தல், பொதுமக்கள் மற்றும் செய்தியாளர்களை பொது வெளியில் சுட்டுக்கொன்றுவிட்டு தப்புதல் உள்ளிட்ட குற்ற செயல்களின் முக்கிய மையமாக இருந்து வருகிறது. இங்கு போதைப்பொருள் கடத்தலுக்காக சட்ட விரோதமாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுரங்கப்பாதைகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில் மெக்சிகோவில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்று அந்நாட்டின் தேசிய தேடுதல் ஆணையம் அறிவித்துள்ளது. காணாமல் போன தங்கள் குடும்பத்தினரை ஆற்றங்கரையின் ஓரத்திலும், காடுகளிலும் தேடும் பணியில் பலர் வேதனையுடன் தொடர்ந்து ஈடுபட்டிருக்கிறார்கள். கடந்த 2014-ம் ஆண்டு செப். மாதத்தில் ஒரு ஆர்ப்பாட்டத்திற்கு சென்ற 43 பள்ளி மாணவர்கள் என்ன ஆனார்கள் என இதுவரை தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
பிஷப்களை தேர்வு செய்யும் குழுவில் பெண்கள்: போப் பிரான்சிஸ் தகவல்
நாளுக்கு நாள் அதிகரிக்கும் பொருளாதார நெருக்கடி; இலங்கையில் இருந்து அவசரமாக வெளியேறும் இளைஞர்கள்
உளவு பார்த்ததாக கூறி இங்கிலாந்து தூதரக அதிகாரி கைது; ஈரான் அரசு அதிரடி.!
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா.. கடந்த 48 மணி நேரத்தில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என 54 பேர் பதவி விலகிய நிலையில் முடிவு
இந்தியாவில் ஒமைக்ரானின் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு; முககவசம் கட்டாயம்; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
இந்தியா - நேபாளம் இடையே மீண்டும் பேருந்து சேவை தொடக்கம்..: சிலிகுரி-காத்மாண்டு வரை 615 கி.மீ பேருந்து சேவை
ஆச்சரியம்..!: அமெரிக்காவில் விசித்திரமாக பச்சை நிறத்தில் தோன்றிய வானம்..!!
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..