திருவில்லிபுத்தூரில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 7 பேருக்கு 70 ஆயிரம் அபராதம்
2021-10-13@ 12:19:44

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 7 பேரிடம் வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.அவர்களிடமிருந்து இறந்த காட்டுப்பன்றி உடல், 4 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.விருதுநகர் அருகே உள்ள சத்திரெட்டியப்பட்டி பகுதியில் இரவு நேரங்களில் வேட்டை நாய்களை வைத்து வனவிலங்குகளை வேட்டையாடுவதாக வன பாதுகாப்பு அதிகாரி மணிவண்ணனுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அவரது உத்தரவின்பேரில், வன அதிகாரி செந்தில் ராகவன் தலைமையில் நேற்றிரவு சத்திரெட்டியபட்டி பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில், 7 பேர் வேட்டை நாய்களுடன் வனவிலங்குகளை வேட்டையாடி கொண்டிருந்தது தெரியவந்தது. அவர்களை வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடமிருந்த இறந்த காட்டுப்பன்றியின் உடல், 4 டூவீலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
தொடர்ந்து பிடிபட்ட 7 பேரையும் திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் 5 பேர் விருதுநகர் அருகே உள்ள குமாரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும், 2 பேர் மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ளது தும்ம நாயக்கம்பட்டியைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த 7 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.70 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகள்
பைப்லைன் இல்லாததால் மழைநீர் கசிவு அருவிபோல் காட்சியளிக்கும் மெட்ரோ ரயில் மேம்பாலம்: பொதுமக்கள் தவிப்பு
நெல்லை அருகே முன்னீர்பள்ளத்தில் 480 ஆண்டுக்கு முற்பட்ட செப்பேடு கண்டெடுப்பு
திருச்சி பொதுப்பணித்துறை ஆபீசில் விஜிலென்ஸ் ரெய்டு: ரூ.31.26 லட்சம் பறிமுதல்
கோவை- மஞ்சூர் சாலையில் அரசு பஸ், தனியார் வாகனங்களை வழிமறித்த காட்டு யானை கூட்டம்: பயணிகள் பீதி
திருப்பதியில் போலி தரிசன டிக்கெட் சேலம் டூரிஸ்ட் நிறுவனத்தில் ஆந்திர போலீசார் விசாரணை
புதிய தொழில்நுட்பத்தில் பட்டாசு தொழிலை மேம்படுத்த 11 பேர் குழு: ஒன்றிய தொழில் வர்த்தகத்துறை அமைச்சகம் நியமனம்
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!
நுபுர் சர்மாவை ஆதரித்த டெய்லர் தலை துண்டித்து கொடூர கொலை ராஜஸ்தானில் வன்முறை, போராட்டம்!!