நாடு முழுவதும் மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு: டெல்லி இருளில் மூழ்கும் அபாயம்..!
2021-10-09@ 21:55:11

டெல்லி: நிலக்கரி பற்றாக்குறையை தீர்க்காவிட்டால் டெல்லி இருளில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி பற்றாக்குறை பூதாகரமாக வெடித்துள்ளது. டெல்லியின் மின் தேவையை பூர்த்தி செய்யும் 3 முக்கிய மின் உற்பத்தி நிலையங்களில் ஒரு நாளைக்கு மட்டுமே நிலக்கரி கையிருப்பு எஞ்சியுள்ளது. இதனால் டெல்லியில் மின்தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க நிலக்கரி விநியோகத்தை துரிதப்படுத்த வேண்டும் என மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சம்மந்தப்பட்ட துறை அமைச்சர்களுக்கு துரித நடவடிக்கை எடுக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் வருங்காலத்தில் இது போன்ற நெருக்கடி ஏற்படாமல் தடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தட்டுப்பாடு காரணமாக தற்போதே மின் உற்பத்தி குறைந்திருப்பதாக டெல்லி மின்சாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் கூறியுள்ளார். அதேபோல ஆந்திராவிலும் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின் உற்பத்தி குறைந்து பாசன பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அறுவடை சமயத்தில் பாசனம் தடைபடுவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்றும் அடிக்கடி மின்வெட்டு ஏற்படும் நெருக்கடியில் இருப்பதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே ராஜஸ்தான் மாநிலத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக ஒரு மணி நேர மின் வெட்டு அமல்படுத்தப்பட்டுவிட்டது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 3 முதல் 4 மணி நேரம் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது.
மேலும் செய்திகள்
ஒன்றிய, மாநில அரசுகளின் மானியங்கள், சேவைகளை பெற ஆதார் எண் கட்டாயம்: UIDAI அறிவிப்பு
டெல்லியில் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கரை நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
மகாராஷ்டிராவில் பயணிகள் ரயிலுடன் சரக்கு ரயில் மோதி கோர விபத்து: படுகாயமடைந்த 50 பயணிகளுக்கு தீவிர சிகிச்சை
இந்தியாவில் ஒரே நாளில் 9,062 பேருக்கு கொரோனா... 36 பேர் பலி: ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை!!
காஷ்மீர் காங்கிரஸ் பிரச்சார குழு தலைவர் பதவியை ஏற்க குலாம் நபி ஆசாத் மறுப்பு: நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களில் ராஜினாமா செய்ததால் பரபரப்பு
விவசாயிக்கு இலவச மின்சாரம் ரத்தானால் ஆழாக்கு கூட மிஞ்சாது: கடும் உணவு தட்டுப்பாடுக்கு வழிவகுக்கும் ஒன்றிய அரசின் மின்சார சட்டத் திருத்த மசோதா
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!