விருதுநகர் அருகே 69 மூட்டை குட்கா பறிமுதல்
2021-10-05@ 21:41:11

விருதுநகர்: விருதுநகர் அருகே லாரியில் கடத்தப்பட்ட 69 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக லாரி ஓட்டுநர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். விருதுநகர் அருகே கோவில் புலிகுத்தி விலக்கில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வந்த லாரியை நிறுத்தினர். ஆனால், லாரியை ஓட்டுநர் நிறுத்தாமல் சென்றுள்ளார். சந்தேகமடைந்த அதிகாரிகள் லாரியை விரட்டி சென்றனர். கோவில் புலிகுத்தி கிராமத்தில் சங்கிலி கருப்பசாமி (30) என்பவரது வீட்டில், கர்நாடகாவில் இருந்து கடத்தி வந்த புகையிலை பொருட்களை இறக்கி கொண்டிருந்தனர். அங்கு சென்ற தேர்தல் பறக்கும் படை சிவகாசி வட்ட வழங்கல் அதிகாரி ஜெயபாண்டி, சிறப்பு சார்பு ஆய்வாளர் இரணியன் மற்றும் தலைமை காவலர் சித்ரா, குருசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர் 69 மூட்டை, தடை செய்யப்பட்ட குட்கா புகையிலையை பறிமுதல் செய்தனர்.
தகவலறிந்த வச்சக்காரபட்டி காவல் ஆய்வாளர் கருப்பசாமி தலைமையிலான போலீசார் வீட்டின் உரிமையாளர் சங்கலி கருப்பசாமி, லாரி ஓட்டுநர்கள் ராமர் (54), மகேஷ் (30) ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:
குட்காமேலும் செய்திகள்
திண்டுக்கல் அருகே புடலங்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
தோவாளை-தாழக்குடி சாலை; ரூ.3.28 கோடியில் சீரமைப்பு: ரூ.3.87 கோடியில் ஆற்றின்குறுக்கே பாலமும் அமைக்கமுடிவு
மேட்டூர் அணைக்கு 19,000 கனஅடி நீர்வரத்து
வேலூரில் பொதுமக்கள் வேதன; ரூ.32.52 கோடியில் கட்டிய விமான நிலையம் பயன்பாட்டிற்கே வராமல் பாழாகும் அவலம்: முட்புதர்கள் சூழ்ந்து காடு போல் மாறியது
கேரளாவில் 31ம் தேதி ஓணம் பண்டிகை; தோவாளையில் அறுவடைக்கு தயாரான பூக்கள்: ஆர்டர்களும் குவிந்து வருகிறது
பழநி மலைக்கோயில் ரோப்காரில் புதிய பெட்டிகள் பொருத்தி சோதனை ஓட்டம்
மத்தியதரைக் கடலில் குடியேறியவர்கள் பத்திரமாக மீட்பு..!!
ஆர்டிமிஸ் 1 திட்டத்துக்கான ஒத்திகையை தொடங்கியது நாசா
கடலுக்கு அடியில் அதிசய நகரம்: அழகிய ரோமன் நகரின் அற்புத காட்சி..!!
கலிபோர்னியாவை அச்சுறுத்தும் காட்டுத்தீ.. தீயை அணைக்க வீரர்கள் போராட்டம்!!
மெக்சிகோ சுரங்கத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் சுரங்கத் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி தீவிரம்...