புளியந்தோப்பில் தொட்டாலே உதிரும் அடுக்குமாடி குடியிருப்பு.. கட்டுமான நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க ஐஐடி நிபுணர்கள் குழு பரிந்துரை
2021-10-04@ 16:18:52

சென்னை : சென்னை புளியந்தோப்பில் மிகவும் தரமற்ற அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டிய கட்டுமான நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க ஐஐடி நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புளியந்தோப்பு கே.பி. பார்க்கில் கட்டப்பட்ட தரமற்ற அடுக்குமாடி குடியிருப்பு தொடர்பாக ஐஐடி நிபுணர் குழுவினர் தங்கள் இறுதி அறிக்கையை தாக்கல் செய்தனர்.அதில் இந்த பணிகளை மேற்கொண்ட PST நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாட்டு அரசுக்கு நிபுணர் குழுவினர் பரிந்துரை செய்துள்ளனர். அத்துடன் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளனர். கே.பி. பார்க்கில் உள்ள 3 அடுக்குமாடி குடியிருப்புகள் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ் அண்மையில் கட்டப்பட்டது.
இதில் 1900 குடியிருப்புகள் கட்டப்பட்டு பயனாளிகளுக்கு கொடுக்கப்பட்டன. இதை பிஎஸ்டி என்னும் கட்டுமான நிறுவனம் கட்டியிருந்தது. ஆனால் அனைத்து கட்டிடங்களும் மிகவும் மோசமாக இருப்பதும் படிகள், சுவர்கள், மேற்கூரைகள் மிக மிக தரமற்ற முறையில் கட்டுப்பட்டு இருப்பதையும் ஊடகங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. இதனை தொடர்ந்து அங்கு அமைச்சர்கள் ஆய்வு செய்த பின்னர், சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி அடுக்குமாடி குடியிருப்புகளின் உறுதி தன்மையை அறிய ஐஐடி நிபுணர் குழு ஆய்வை தொடங்கியது. தற்போது அந்த குழுவினர் தங்கள் ஆய்வை முடித்துள்ளனர். அதன் இடைக்கால அறிக்கை கடந்த செப் 17ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தற்போது 441 இதன் முழுமையான அறிக்கை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக இயக்குனர் கோவிந்த ராமிடம் அளிக்கப்பட்டது. இந்த குழுவினர் 3 கட்டிடங்களிலும் மொத்தம் 100 இடங்களில் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.இதன்படி அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக தமிழக அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடலாம் என்று தெரிகிறது.
மேலும் செய்திகள்
போரூர் மின்சார மயான பூமியில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணி: பிருந்தாவன் நகர் மயான பூமியை பயன்படுத்திக் கொள்ளுமாறு பெருநகர சென்னை மாநகராட்சி அறிவிப்பு
ஹெல்மெட் அபராதம் என்பது மக்களை பாதுகாக்க எடுக்கப்படும் முடிவு; ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை: கபில் குமார் சரட்கர் பேட்டி
மதிமுக நிர்வாகிகள் 3 பேர் அதிரடி நீக்கம்: வைகோ அறிவிப்பு
ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு கலால் வரியை ஏற்றியது ரூ.26.77 குறைத்தது ரூ.14.50 மட்டுமே: ஒன்றிய பாஜ அரசு மீது கே.எஸ்.அழகிரி தாக்கு
ஒரு ஆதரவாளர் கூட கிடைக்காமல் ஓபிஎஸ் திண்டாட்டம்; ராஜ்யசபா அதிமுக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் தொடர் இழுபறி: எடப்பாடி பழனிச்சாமி திடீர் கெடு
டூ வீலர்கள் திருட்டு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை