நகைக்கடன் முறைகேடு விவகாரம் தினமும் ஆய்வறிக்கையை அனுப்ப வேண்டும்: கூட்டுறவு சங்க பதிவாளர் உத்தரவு
2021-10-03@ 00:35:02

சென்னை: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம், தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 100 சதவீதம் நகைக்கடன் ஆய்வுக்கு குழு அமைத்து ஆணையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இதற்கான ஆய்வுப் படிவங்கள் 28.9.2021 அன்று வாட்ஸ் அப் மூலம் தமிழ்நாடு மாநிலத் தலைமைக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர், தமிழ்நாடு கூட்டுறவு மாநில வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் மேலாண்மை இயக்குனர், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர், அனைத்து மண்டல இணைப்பதிவாளர்கள் மற்றும் அனைத்து மத்தியக் கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் தங்கள் மண்டலத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய மொத்த நகைகளின் விவரம், ஆய்வு செய்ய தேவையான குழுக்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 250 முதல் 300 பாக்கெட்டுகள் என்ற வீதம் மொத்த நகைகளை ஆய்வு செய்ய தேவைப்படும் நாட்கள் மற்றும் தோராயமாக 100 சதவீதம் நகைக்கடன் ஆய்வு முடிவுறும் நாள் போன்ற விவரங்களை கூகுள் சீட்டில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
படிவங்களை ஆய்வுக்குழுவிற்கு தொடர்புறுத்தி நடவடிக்கை மேற்கொண்டும், 100 சதவீத ஆய்வினை முடிக்க ஆகும் நாட்களைக் கணக்கிட்டு முடிவுறும் தேதி தொடர்பான படிவத்தை பூர்த்தி செய்து உடன் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். 100 சதவீத ஆய்வு தொடர்பான தினசரி முன்னேற்ற அறிக்கையினை பதிவாளர் அலுவலகத்திற்கு தினந்தோறும் மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
அதிமுக ஆட்சியில், விருது பெறுவதற்காக 22,000 சாலை விபத்து மரணங்கள் குறைத்து காட்டப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியீடு..!
தமிழ்நாட்டு மக்களுக்கு சீரான மின்விநியோகம் வழங்க வேண்டும்.: அனைத்து அலுவலர்களுக்கும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு
சென்னை பாரிமுனையில் மாநகராட்சிக்கு சொந்தமான 130 கடைகளுக்கு சீல்: 40 லட்சம் வாடகை பாக்கி
கலைஞரின் மனச்சாட்சியாக அறியப்படும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 89வது பிறந்தநாள்: திருவுருவ சிலைக்கு திமுக அமைச்சர்கள் மரியாதை..!!
காஞ்சிபுரம் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு மேசை, விலையில்லா சைக்கிள்கள்; எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் சுதந்திர போராட்ட தியாகி கொடியேற்றினார்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!