மலர்கள் குறைவாக உள்ளதால் ஊட்டி ரோஜா பூங்காவுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
2021-10-02@ 20:31:58

ஊட்டி: தொட்டிகளில் மலர்கள் மிகவும் குறைவாக உள்ளதால் ஊட்டி ரோஜா பூங்காவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி முதல் சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தொடர்ந்து தொற்று பரவல் குறைய துவங்கிய நிலையில் 4 மாதங்களுக்கு பின் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அனைத்து சுற்றுலா தலங்களும் திறக்கப்பட்டு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இரண்டாவது சீசனும் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிக்க வசதியாக தாவரவியல் பூங்காவில் தொட்டிகளில் நடவு செய்யப்பட்ட பல்வேறு ரக மலர் செடிகள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன. இவற்றை சுற்றுலா பயணிகள் பார்த்து வருகின்றனர். வார நாட்களை காட்டிலும், சனி, ஞாயிறு வார இறுதிநாட்களில் மட்டுமே சுற்றுலா தலங்களில் கூட்டம் காணப்படுகிறது. இந்த சூழலில் ஊட்டி ரோஜா பூங்காவில் உள்ள மலர் செடிகளில் ரோஜா மலர்கள் குறைவாக உள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் வருகையும் குறைவாகவே உள்ளது.
மேலும் செய்திகள்
12 ஆண்டுகளுக்கு பின் மதுரை-தேனி ரயில் சேவை நாளை மறுநாள் தொடக்கம்: பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கி வைக்கிறார்
குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கல்லூரி மாணவி கொலை: 2 இடங்களில் சாலை மறியல்
தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால் பாலியஸ்டர் நூல் உற்பத்திக்கு மாற கழிவு பஞ்சு நூல் உற்பத்தியாளர் முடிவு
விருதுநகர் இளம்பெண் கூட்டு பலாத்கார வழக்கு 7 பேர் மீது சிபிசிஐடி போலீசார் 806 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்
கலால் வரியை குறைத்து பித்தலாட்டத்தை ஒன்றிய அரசு செய்திருக்கிறது: டி.கே.எஸ்.இளங்கோவன் எம்பி குற்றச்சாட்டு
அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் துவக்க விழா ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு வாழ்வளித்தவர் கலைஞர்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு
இத்தாலி நாட்டில் வெடித்துச் சிதறும் எட்னா எரிமலை!: ஆறாக பாய்ந்தோடும் நெருப்புக் குழம்பு..!!
"மண்ணை காக்க ஒரு பயணம்".. 100 நாள் பைக் பயணத்தில் அமீரகம் வந்த ஜக்கி வாசுதேவ்!!
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை