இன்று கிராமசபை கூட்டம்: கலெக்டர் தகவல்
2021-10-02@ 05:20:15

திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட அறிக்கை: மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தல் நடைபெறும் வட்டாரங்களிலும், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் தேர்தல் நடைபெறும் ஊராட்சிகளிலும், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ளது. இந்த ஊராட்சிகளை தவிர, மற்ற அனைத்து ஊராட்சிகளிலும் அரசினால், வெளியிடப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக தவறாமல் கடைப்பிடித்து இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
இதில் பெருவாரியான மக்கள் பங்கேற்கும் பொருட்டு கிராம ஊராட்சிகளில் முழுமையான அறிவிப்புகள் மற்றும் விளம்பரங்கள் செய்து சிறப்பான முறையில் கிராம சபை கூட்டத்தை நடத்திட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். கிராம சபை கூட்ட ஏற்பாடுகளை கண்காணிக்கவும், பார்வையிடவும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
கூடலூரில் 20 வீடுகளில் திடீர் விரிசல்: பொதுமக்கள் அச்சம்
முத்துப்பேட்டை அடுத்த குன்னலூரில் மாரியாற்றில் படர்ந்த ஆகாயத்தாமரையை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்
திருவாரூர் வரலாற்று சிறப்பு மிக்க கமலாலய தெப்ப குளத்தில் முழுமையாக நீர் நிரப்ப வேண்டும்: பக்தர்கள் வலியுறுத்தல்
வீட்டின் கதவை உடைத்து அரிசி சாப்பிட்ட யானை
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை கோயிலில் திருடப்பட்ட ரூ.12 கோடி மதிப்புள்ள 5 வெண்கல சிலைகள் மீட்பு; 4 பேர் கைது: சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் அதிரடி..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!