காங். காரிய கமிட்டி கூட்டத்தை கூட்ட குலாம் நபி ஆசாத் கோரிக்கை!: ஊடகங்கள் வாயிலாக வலியுறுத்தியதற்கு கே.எஸ்.அழகிரி எதிர்ப்பு..!!
2021-09-30@ 14:21:30

சென்னை: காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தை கூட்ட வேண்டும் என குலாம் நபி ஆசாத் ஊடகங்கள் வாயிலாக கூறியிருப்பது கட்சியின் கட்டுப்பாடுகளுக்கு எதிரானது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரசில் உட்கட்சி பூசல் அதிகரித்திருப்பதை அடுத்து கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்தும் ஊடகங்கள் வாயிலாக கட்சி தலைமைக்கு இந்த கோரிக்கையை விடுத்திருந்தார்.
இந்த நிலையில் குலாம் நபி ஆசாத்தின் இந்த செயலுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஊடகங்கள் வாயிலாக கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தை கூட்ட வேண்டும் என கூறியது கட்சி கட்டுப்பாடுகளுக்கு எதிரானது என்று அவர் கூறியிருக்கிறார். மாறாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்தித்து நேரில் கோரிக்கை வைத்திருக்கலாம் என்றும் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை: காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை..!
தமிழகத்தில் காடுகளின் பரப்பளவை 33%ஆக உயர்த்த நடவடிக்கை: வனத்துறை அமைச்சர் கா.ராமசந்திரன் தகவல்..!
தமிழகத்தில் ஓராண்டில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்: அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
கல்வியில் மிகப்பெரிய மறுமலர்ச்சி மற்றும் புரட்சியை பிரதமர் மோடி ஏற்படுத்தி உள்ளார்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!!
மோசமான நிலையில் இலங்கை..!! பொருளாதார நெருக்கடியில் அல்லல்படும் மக்கள்
மூடுபனிக்கு நடுவே காட்சியளிக்கும் சிட்னி நகரம்!: பனியால் மூடப்பட்ட பிரம்மாண்ட வானுயர்ந்த கட்டிடங்கள்..!!
ஒரே மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்- பிரதமர் மோடி : தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடக்கி வைத்தார்!!
பெரு நாட்டில் களைகட்டிய கோமாளிகள் தினம்.!! குழந்தைகளுடன் மக்கள் உற்சாக வரவேற்பு
ஏற்காட்டில் கோடை விழா: பட்டாம்பூச்சி, சின்சான் உருவம், மஞ்சப்பை உள்ளிட்ட வடிவங்கள் மலர்களால் வடிவமைப்பு!!