நத்தம் அருகே குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
2021-09-29@ 13:52:44

நத்தம்: நத்தம் அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.நத்தம் அருகே குட்டுப்பட்டி ஊராட்சியில் டி.நகர் உள்ளது. இப்பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்காக அப்பகுதியில் ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இப்பகுதியில் பூமிக்கடியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் மூலம் குடியிருப்பு பகுதிக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குழாய்கள் சேதமடைந்து தண்ணீர் ஆங்காங்கே வெளியேறி வீணாகிறது. இதனால் மற்ற பகுதிகளில் குடிநீர் சீராக விநியோகம் செய்ய முடியாமல் போய்விடுகிறது. எனவே சம்மந்தப்பட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை மேற்கொண்டு தண்ணீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
‘வளமான ஆலந்தூர்’ செயலி அறிமுகம்
ரூ.5.8 கோடி மதிப்பீட்டில் சமத்துவபுரம் வீடுகள் மறுசீரமைக்கும் பணி: அமைச்சர் நாசர் அடிக்கல் நாட்டினார்
திடீர் தீ விபத்தில் 3 கடைகள் நாசம்
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மழைநீர் கால்வாய் சீரமைப்பு பணி: நகர்மன்ற தலைவர் ஆய்வு
கும்மிடிப்பூண்டி பகுதியில் பழுதடைந்த மின்கம்பங்களை அகற்ற மக்கள் வலியுறுத்தல்
விபத்தில் 3 பேர் பரிதாப பலி
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்