'ஊரக உள்ளாட்சி தேர்தலில் பூத் சிலிப் இல்லை என வாக்காளரை திருப்பி அனுப்பக்கூடாது'!: தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுரை..!!
2021-09-29@ 10:22:19

சென்னை: ஊரக உள்ளாட்சி தேர்தலில் பூத் சிலிப் இல்லாத வாக்காளரை திருப்பி அனுப்பக்கூடாது என வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9ம் தேதியும் நடைபெறவுள்ளது. மேலும் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சி இடங்களுக்கும் அக்டோபர் 6, 9ல் தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த 22ம் தேதியுடன் இதற்கான வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்தது. இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் வாக்களிக்க அனுமதிக்கலாம் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. வாக்குப்பதிவு அன்று பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்த கையேடுகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, வாக்காளரை எளிதாக அடையாளம் காண அளிக்கப்படும் பூத் சிலிப் இல்லை என வாக்காளரை திருப்பி அனுப்பக்கூடாது எனவும் பூத் சிலிப் இல்லை என்றாலும் வாக்காளர் அட்டையை சோதித்து வாக்களிக்க அனுமதிக்கலாம் எனவும் தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்
அதிமுக ஆட்சியில், விருது பெறுவதற்காக 22,000 சாலை விபத்து மரணங்கள் குறைத்து காட்டப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியீடு..!
தமிழ்நாட்டு மக்களுக்கு சீரான மின்விநியோகம் வழங்க வேண்டும்.: அனைத்து அலுவலர்களுக்கும் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு
சென்னை பாரிமுனையில் மாநகராட்சிக்கு சொந்தமான 130 கடைகளுக்கு சீல்: 40 லட்சம் வாடகை பாக்கி
கலைஞரின் மனச்சாட்சியாக அறியப்படும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 89வது பிறந்தநாள்: திருவுருவ சிலைக்கு திமுக அமைச்சர்கள் மரியாதை..!!
காஞ்சிபுரம் மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களுக்கு மேசை, விலையில்லா சைக்கிள்கள்; எம்எல்ஏ எழிலரசன் வழங்கினார்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ கல்லூரியில் சுதந்திர போராட்ட தியாகி கொடியேற்றினார்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!