கோயில் சொத்துக்களை முறைப்படுத்த ஓய்வு பெற்ற வருவாய், நில அளவை அலுவலர்கள்: ஆணையர் குமரகுருபரன் அதிரடி நடவடிக்கை
2021-09-29@ 00:02:24

சென்னை: கோயில் சொத்துக்களை முறைப்படுத்தும் பணிக்காக, ஓய்வு பெற்ற வருவாய், நில அளவை அலுவலர்கள் கமிஷனரின் ஒப்புதல் பெற்று நியமனம் செய்ய வேண்டும் என்று ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
* கோயில் நிலங்களை முறைப்படுத்தும் பணிக்கு ஒரு இணை ஆணையர் மண்டலத்துக்கு ஒரு ஓய்வு பெற்ற துணை ஆட்சியர், ஒரு உதவி ஆணையர் பிரிவிற்கு ஒரு ஓய்வு பெற்ற வட்டாட்சியரும், ஒரு ஓய்வு பெற்ற நில அளவையரும், ஒரு ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலரும், ஆணையரின் அனுமதி பெற்று பணி நியமனம் மற்றும் பணி நீட்டிப்பு செய்ய வேண்டும்.
* ஓய்வு பெற்ற வட்டாட்சியர்கள் கிடைக்காதபோது அப்பதவியை ஓய்வு பெற்ற துணை வட்டாட்சியர் அல்லது ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளர் அல்லது ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர்களை கொண்டு பணிபுரிய அனுமதிக்கலாம்.
* இதே போன்று ஓய்வு பெற்ற நிலஅளவையர் பதவியினை ஏதேனும் ஒரு நிலையில் ஓய்வு பெற்ற நில அளவையர் பதவியைக் கொண்டு பணிபுரிய அனுமதிக்கலாம்.
* கோயில் நிலங்கள் முறைப்படுத்தும் பணிக்காக இணை ஆணையர் மண்டலந்தோறும் நியமிக்கப்பட்டுள்ள ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகள் குறித்து அவர்களால் சமர்பிக்கப்படும் நாள் குறிப்பு மற்றும் மாதாந்திர பணி முன்னேற்றம் குறித்து மண்டல இணை ஆணையரால் சீராய்வு செய்யப்பட்டு மாதம்தோறும் அறிக்கை சமர்பிக்க வேண்டும்.
* ஓவ்வொரு உதவி ஆணையர் மண்டலங்களிலும் சராசரியாக 1400 கோயில்கள் உள்ள நிலையில், அதிக அளவிலான நிலங்களை கொண்ட கோயில்களுக்கு மேற்கண்டவாறு இணை ஆணையர் மண்டலங்களில் நியமனம் செய்யப்படும் ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலரை கொண்டு பணியினை முடிக்க இயலாத நிலை ஏற்படும். எனவே, ஏற்கனவே இருந்த நடைமுறைகளின்படி தேவைப்படும் கோயில்களுக்கு ஆணையர் அனுமதி பெற்று ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலர்களை பணி நியமனம் செய்ய அனுமதிக்கலாம்.
* ஓய்வு பெற்ற வருவாய்த்துறை அலுவலர்கள், நில அளவைத்துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியம் திருத்தியமைத்து வரும் 1ம் தேதி முதல் உத்தரவிடப்படுகிறது. அதன்படி, துணை ஆட்சியருக்கு ரூ.30 ஆயிரம், வட்டாட்சியர் ரூ.25 ஆயிரம், துணை வட்டாட்சியர் ரூ.17 ஆயிரம், கிராம நிர்வாக அலுவலர் ரூ.12 ஆயிரம், நில அளவர் ரூ.15 ஆயிரம், குறுவட்ட நில அளவையர் ரூ.12 ஆயிரம், சார் ஆய்வாளர் ரூ.14 ஆயிரம், துணை ஆய்வாளர் ரூ.15 ஆயிரம், ஆய்வாளர் ரூ.18 ஆயிரம் வழங்கப்படுகிறது.
மேலும் செய்திகள்
ஒருங்கிணைப்பாளர்கள் பதவி முன்கூட்டியே காலாவதியானது ஏன்? ஈபிஎஸ் தரப்பிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய நீதிபதி
கோயில் காணிக்கை நகைகள் தங்கக் கட்டிகளாக மாற்றி முதலீடு: பாத்திரத்தை கோயில் நிர்வாகியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின்
களைகட்டும் 75வது சுதந்திர தின கொண்டாட்டம்!: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு..பொதுமக்கள் இலவசமாக காணலாம்..!!
இலவச வேட்டி, சேலை உற்பத்திக்கான அரசாணையை உடனே வெளியிடுக: தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்..!!
போதைப்பொருள் கடத்தல் செய்பவர்கள் இந்த சமுதாயத்தையே கெடுக்கும் குற்றவாளிகள்; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க திமுக அரசு தயக்கம் காட்டாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி..!!
செஸ் ஒலிம்பியாட் போன்று உலகளாவிய போட்டிகளை தமிழகத்தில் நடத்த வாய்ப்பு அளியுங்கள்: பாராட்டிய பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை..!!
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!