தீவிரவாதிகள் கைவரிசை: பாகிஸ்தானில் ஜின்னா சிலை தகர்ப்பு
2021-09-28@ 00:02:47

கராச்சி: பாகிஸ்தான் நாட்டை தோற்றுவித்தவரும், பாகிஸ்தானின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான முகமது அலி ஜின்னாவின் சிலையை, தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் போல வந்து வெடிகுண்டு வைத்து தகர்த்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கு கடலோர நகரமான குவாடர் பகுதியில் முகமது அலி ஜின்னாவின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான பகுதி என்பதால் அவரது சிலை இங்குள்ள கடற்கரை சாலையில் கடந்த ஜூன் மாதம் நிறுவப்பட்டது.
இந்நிலையில், தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் போன்று வந்து அப்பகுதியை சுற்றிப்பார்ப்பது போல் சிலைக்கு அடியில் வெடிகுண்டு வைத்தனர். அந்த குண்டு வெடித்ததில் சிலை சேதமடைந்தது. இந்த தீவிரவாத செயலுக்கு ‘பலுச் விடுதலை முன்னணி’ என்ற தடை செய்யப்பட்ட அமைப்பு பொறுப்பேற்பதாக அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் பாப்கார் பலோச் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். குவாடர் துணை ஆணையர் அப்துல் கபீர் தெரிவிக்கையில், `இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. சிலைக்கு வெடிகுண்டு வைத்தவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை விரைவில் முடியும்,’ என்று கூறினார்.
Tags:
தீவிரவாதிகள்மேலும் செய்திகள்
ஈரான் நாட்டில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவு: 2 பேர் உயிரிழந்த நிலையில், 70க்கும் மேற்பட்டோர் படுகாயம்
நவாஸ் மகள் மரியம் நாடு திரும்பினார்
செக் குடியரசில் புதிய அதிபர் தேர்வு
இங்கிலாந்தில் கவுரவம் இந்திய இளவரசிக்கு நீல வில்லை விருது
கறுப்பின வாலிபர் பலி அமெரிக்காவில் மக்கள் போராட்டம்: 5 போலீசார் கைது
நேரடி, மறைமுக வரிகளை எளிமையாக்க வேண்டும்: இந்தியாவுக்கு அமெரிக்கா கோரிக்கை
ஆரஞ்சு மரத்தை அதிர்ஷ்டமாக கருதும் ஹாங்காங் மக்கள்: வேண்டுதல்களை தாள்களில் எழுதி மரத்தில் தொங்கவிட்டு பிரார்த்தனை..!!
மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற செல்லப் பிராணிகள் திருவிழா: லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள Pet Fed நிகழ்ச்சி
பிரான்ஸ் அரசின் ஓய்வூதிய சீர்திருத்தக் கொள்கைக்கு எதிர்ப்பு: அதிபர் மேக்ரான் அரசுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம்..!!
பெரிய அரங்குகள், நூலகங்கள், நவீன வசதிகள்: புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் மாதிரி புகைப்படங்கள் வெளியீடு..!!
தமிழ்நாடு பெயரை மாற்றுமாறு கூறிய ஆளுநர் ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங். கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்..!!