தீவிரவாதிகள் கைவரிசை: பாகிஸ்தானில் ஜின்னா சிலை தகர்ப்பு
2021-09-28@ 00:02:47

கராச்சி: பாகிஸ்தான் நாட்டை தோற்றுவித்தவரும், பாகிஸ்தானின் தந்தை என்று அழைக்கப்படுபவருமான முகமது அலி ஜின்னாவின் சிலையை, தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் போல வந்து வெடிகுண்டு வைத்து தகர்த்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தின் தென்மேற்கு கடலோர நகரமான குவாடர் பகுதியில் முகமது அலி ஜின்னாவின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான பகுதி என்பதால் அவரது சிலை இங்குள்ள கடற்கரை சாலையில் கடந்த ஜூன் மாதம் நிறுவப்பட்டது.
இந்நிலையில், தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகள் போன்று வந்து அப்பகுதியை சுற்றிப்பார்ப்பது போல் சிலைக்கு அடியில் வெடிகுண்டு வைத்தனர். அந்த குண்டு வெடித்ததில் சிலை சேதமடைந்தது. இந்த தீவிரவாத செயலுக்கு ‘பலுச் விடுதலை முன்னணி’ என்ற தடை செய்யப்பட்ட அமைப்பு பொறுப்பேற்பதாக அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் பாப்கார் பலோச் டிவிட்டரில் தெரிவித்துள்ளார். குவாடர் துணை ஆணையர் அப்துல் கபீர் தெரிவிக்கையில், `இது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. சிலைக்கு வெடிகுண்டு வைத்தவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை விரைவில் முடியும்,’ என்று கூறினார்.
Tags:
தீவிரவாதிகள்மேலும் செய்திகள்
உளவு பார்த்ததாக கூறி இங்கிலாந்து தூதரக அதிகாரி கைது; ஈரான் அரசு அதிரடி.!
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ராஜினாமா.. கடந்த 48 மணி நேரத்தில் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் என 54 பேர் பதவி விலகிய நிலையில் முடிவு
இந்தியாவில் ஒமைக்ரானின் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு; முககவசம் கட்டாயம்; உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
இந்தியா - நேபாளம் இடையே மீண்டும் பேருந்து சேவை தொடக்கம்..: சிலிகுரி-காத்மாண்டு வரை 615 கி.மீ பேருந்து சேவை
வெளிநாடுகளிலும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், டிவிட்டர் தளத்தில் இருந்து சர்ச்சைக்குரிய ‘காளி’ போஸ்டர் நீக்கம்...
லஞ்சம் கேட்டதாக குற்றச்சாட்டு இலங்கை அமைச்சர் ராஜினாமா: பிரதமர் ரணில் பதவி விலகக்கோரி போர்க்கொடி
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!