கிருஷ்ணா கால்வாயில் மூழ்கி ஐடி ஊழியர் பரிதாப பலி
2021-09-27@ 00:44:39

சென்னை: மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவ் (26). ஐடி நிறுவனத்தில் பணிபுரிகிறார். நேற்று முன்தினம் மாலை, இவர் தனது நண்பர்களான வானகரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (26), பட்டாபிராம் சோரஞ்சேரி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (27) ஆகியோருடன் காரில் அரண்வாயல் பகுதிக்கு சென்று, பூண்டியிலிருந்து செம்பரம்பாக்கம் செல்லும் கிருஷ்ணா இணைப்பு கால்வாயில் குளித்துள்ளார்.
அப்போது, சஞ்சீவ் ஆழமான பகுதியில் சிக்கி கால்வாய் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். தகவலறிந்து செவ்வாப்பேட்டை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கால்வாயில் தண்ணீர் நிறுத்திவிட்டு சஞ்சீவை தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பின், நேற்று முன்தினம் இரவு 9:30 மணியளவில் சஞ்சீவ் உடலை கண்டெடுத்தனர். பின்னர், சடலத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் செய்திகள்
ஒன்றிய நிலத்தடி நீர் ஆணையம் வெளியிட்ட பொது அறிவிப்பு தமிழ்நாட்டிற்கு பொருந்தாது
பணியின்போது மின்சாரம் பாய்ந்து தூய்மை பணியாளர் பலி
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ.120.75 கோடியில் வெள்ள தடுப்பு பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
ஐ.நா.அமைதிப்படையில் புதிய கமாண்டராக மோகன் நியமனம் முதல்வர் வாழ்த்து
ரயில்வே, மார்க்கெட், மால்கள் என பொது இடங்களில் மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்: சென்னை மாநகர போலீஸ் எச்சரிக்கை
மெட்ரோ ரயில் பயணிகளுக்கு இன்று முதல் மாஸ்க் கட்டாயம்: நிர்வாகம் அறிவிப்பு
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!