காந்தி பிறந்த நாளையொட்டி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
2021-09-26@ 05:20:32

திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருவள்ளுர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் தேதி பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி முற்பகல் 10 மணியளவிலும், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டியும், பிற்பகல் 3 மணியளவிலும், மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கிடையே நடைபெறும் பேச்சுப்போட்டியில் வெற்றிப்பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ₹5 ஆயிரம், 2ம் பரிசாக ₹3 ஆயிரம், 3ம் பரிசாக ₹2 ஆயிரம், வழங்கப்படும். இதேபோல், பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெறும் பேச்சுப்போட்டியில் வெற்றிப்பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ₹5 ஆயிரம், 2ம் பரிசாக ₹3 ஆயிரம், 3ம் பரிசாக ₹2 ஆயிரம் வழங்கப்படும். மேலும், பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சுப்போட்டியில் பங்கேற்ற மாணவர்களுள் அரசுப்பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாகத் தெரிவுசெய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை ₹2 ஆயிரம் வீதம் வழங்கப்பெறும்.
ஒவ்வொரு கல்லூரி, பள்ளியிலிருந்தும் பேச்சுப்போட்டியில் 2 மாணவர்கள் மட்டும் கலந்துகொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியர்கள் தங்கள் கல்லூரி முதல்வர், பள்ளி தலைமை ஆசிரியரிடமிருந்து ஆளறிச்சான்று பெற்று போட்டியில் பங்கேற்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
கர்ப்பிணியை கூட்டு பாலியல் தொல்லை செய்த கைதிகள் 11 பேர் விடுதலை: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்
பருவமழை காலக்கட்டத்தில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க கூடும்: கவனமுடன் இருக்க வேண்டும்: தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை..!
சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கு.: மொத்தம் 31 கிலோ தங்கத்தை தனிப்படை போலீஸ் மீட்பு
காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற சாதனையாளர்களுக்கு ரூ.4.31 கோடி ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
விநாயகர் சதுர்த்திக்கு பணம் வசூலிக்கும் அமைப்புகள் எவை? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!