ஏப்.1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ500 ஊதிய உயர்வு
2021-09-26@ 01:35:59

சென்னை: டாஸ்மாக் ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ500 ஊதிய உயர்வு ஏப்ரல் 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை அறிவிப்பின் போது, டாஸ்மாக் ஊழியர்களுக்கு ரூ500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். இந்நிலையில், இதற்கான உத்தரவை டாஸ்மாக் நிர்வாகம் நேற்று வெளியிட்டது.
டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: கடை மேற்பார்வையாளர்களுக்கு ரூ12,750ல் இருந்து ரூ13,250 ஆகவும், விற்பனையாளர்களுக்கு ரூ10,600ல் இருந்து ரூ11,100 ஆகவும், உதவி விற்பனையாளர்களுக்கு ₹9,500ல் இருந்து ₹10,000 ஆகவும் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட ஊதியம் ஏப்ரல் 1, 2021 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்.
உயர்த்தப்பட்ட ஊதியம் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை முதுநிலை மண்டல மேலாளர்கள், மாவட்ட மேலாளர்கள் தவறாது கண்காணிக்க உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 26 ஆயிரம் டாஸ்மாக் ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகள்
வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம்: சென்னை பெருநகர போக்குவரத்து காவல் விழிப்புணர்வு
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு செய்யப்பட்ட, 13 பின்பிரிவு உதவி பொறியாளர்களுக்கு, பணி நியமன ஆணை வழங்கினார் அமைச்சர் எ.வ.வேலு
சென்னையில் கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தம்: தொடரும் பேச்சுவார்த்தை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரூ120.75 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வெள்ள தடுப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
204-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த எழும்பூர் அரசு கண் மருத்துவமனை
பணியிடத்தில் உயிரிழந்த கட்டுமான தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு நிவாரணத் தொகை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!