ஒன்றிய அரசு தகவல் புதிய ஐடி விதிகளுக்கு இணங்கியது டிவிட்டர்
2021-09-25@ 01:19:57

புதுடெல்லி: புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு ஏற்ப, உள்நாட்டில் குறைதீர் அதிகாரிகளை டிவிட்டர் நிறுவனம் நியமித்திருப்பதாக ஒன்றிய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த, ஒன்றிய அரசு கொண்டு வந்த புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளுக்கு டிவிட்டர் மட்டும் இணங்காமல் இருந்தது. புதிய சட்டப்படி, உள்நாட்டை சேர்ந்த குறைதீர் அதிகாரிகளை டிவிட்டர் நியமிக்காததால், இந்தியாவில் வழங்கப்படும் சட்ட பாதுகாப்பை ஒன்றிய அரசு வாபஸ் பெற்றது. இதனால், டிவிட்டரில் வெளியான சர்ச்சைக்குரிய பதிவுகளுக்கு அந்நிறுவனத்தின் மீது போலீசார் பல்வேறு வழக்கு தொடர்ந்தனர்.
இதற்கிடையே, புதிய ஐடி விதிகளுக்கு டிவிட்டர் இணங்காதது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஒன்றிய அரசு தரப்பில் இடைக்கால பிரமாண பத்திரம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘டிவிட்டர் நிர்வாகம் புதிய ஐடி விதிகளுக்கு இணங்க, உள்நாட்டைச் சேர்ந்த குறைதீர் அதிகாரிகள் 3 பேரை நியமித்துள்ளது. அவர்கள் கடந்த ஆகஸ்ட் 4ம் தேதி நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய ஐடி விதிகளை எப்போதும் டிவிட்டர் கடைபிடிக்க வேண்டும். அதை மீறினால் சட்ட பாதுகாப்பை இழக்க வேண்டியிருக்கும்’ என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு அடுத்த மாதம் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 39 பேருடன் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி.. 30க்கும் மேற்பட்டோர் காயம்!!
வடக்கு வங்கக் கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை: ஒடிசாவில் 5 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை...
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான மாநில அமைச்சரவை விரிவாக்கம்; 31 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பு..!!
தமிழ்நாடு- கேரள எல்லையில் வாயில் காயத்துடன் உயிருக்கு போராடும் காட்டு யானை: உடனடி சிகிச்சை அளிக்க பொதுமக்கள் கோரிக்கை
பில்கீஸ் பானோ பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 குற்றவாளிகள் விடுவிப்பு: குஜராத் அரசின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்...
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை நிதி ரீதியாக பலவீனமாக்குகிறது: ஒன்றிய அரசு மீது கேசிஆர் குற்றச்சாட்டு
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!