ஹெராயின் கடத்தல் தொடர்பாக பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் ஆகியோர் அமைதி காப்பது ஏன் ? : ப.சிதம்பரம் கேள்வி
2021-09-24@ 11:43:45

சென்னை : குஜராத் மாநிலத்தில் உள்ள அதானி துறைமுகத்தில் 3 டன் ஹெராயின் கடத்திய கும்பல் தான் கடந்த ஜூன் மாதம் 21 டன் ஹெராயின் போதைப் பொருளையும் கடத்தி இருக்கக் கூடும் என்று முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப. சிதம்பரம் சந்தேகத்தை கிளப்பியுள்ளார்.ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள ப.சிதம்பரம், குஜராத்தில் உள்ள முந்த்ரா எனப்படும் அதானியின் துறைமுகத்தில் கடந்த 15ம் தேதி 21,000 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் சிக்கியதை சுட்டிக் காட்டியுள்ளார். இந்த கடத்தலை 1 தனி நபர் செய்து இருக்க முடியாது என்று கூறியுள்ள ப.சிதம்பரம் அரசியலில் உள்ள உயர் அதிகாரிகளின் உதவியோடு தான் இந்த கடத்தல் நடந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடத்தல் தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் அமைதி காப்பது ஏன் என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.இதனிடையே இதே துறைமுகத்தில் கடந்த ஜூன் மாதத்தில் 21 டன் எடையுள்ள ஹெராயின் போதைப் பொருள் கடத்தப்பட்டு லாரிகள் மூலமாக டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த போதைப் பொருளின் மதிப்பு 70,000 கோடி ரூபாயாகும்.
இந்த கடத்தலையும் ஒரே கும்பல் தான் செய்து இருக்க வாய்ப்பு என்று ப.சிதம்பரம் சந்தேகம் கிளப்பி உள்ளார்.இதனிடையே குஜராத்தில் இருந்து 21 டன் ஹெராயினை கடத்திக் கொண்டு சென்ற லாரிகள் எங்கே என்று கேள்வி எழுந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் கந்தகாரில் உற்பத்தி ஆன ஹெராயின் ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து குஜராத்திற்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.குஜராத் முதல் டெல்லி வரை 1,176 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த லாரி எந்த சுங்கச் சாவடியிலும் சிக்காமல் சென்றது எப்படி என்றும் கேள்வி எழுந்துள்ளது.
மேலும் செய்திகள்
குதிரை பந்தயம், கேளிக்கை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி; அமைச்சர்கள் குழு அதிரடி முடிவு
வரும் 29ம் தேதி முதல் இந்தியா- வங்கதேசம் இடையே மீண்டும் ரயில் சேவை
காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர்ராமனுக்கு 4 நாள் சிபிஐ காவல்: டெல்லி சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
அளவுக்கு அதிகமாக மது குடிக்க வைத்து கள்ளக்காதலி கழுத்து நெரித்துக் கொலை : கேரளாவில் ஓட்டல் அறையில் பரபரப்பு
இந்தியாவுடன் இணைந்து வெளிநாட்டு திரைப்படம் தயாரிப்போருக்கு ஊக்கத்தொகை: கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒன்றிய அமைச்சர் அறிவிப்பு
சாலை விபத்து வழக்கில் 34 ஆண்டுகளுக்குப் பின்னர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு சிறைத்தண்டனை; உச்சநீதிமன்றம் தீர்ப்பு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!